தமிழகம்

அறநிலைய துறை அனைத்து டெண்டர்களும் நிறுத்தம்: புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்ட பிறகு அறிவிக்க முடிவு

செய்திப்பிரிவு

சென்னை: தமிழக அரசின் இந்து சமய அறநிலை​யத் துறை, அதன் கட்​டுப்​பாட்​டில் உள்ள கோயில்​களின் திருப்​பணி​கள், பராமரிப்பு மற்​றும் அன்​றாடச் சேவை​களுக்​கான ஒப்​பந்​தப் புள்​ளி​களை (டெண்​டர்) `1998-ம் ஆண்டு தமிழ்​நாடு டெண்​டர் வெளிப்​படைத்​தன்மை சட்​டத்​தின்' கீழ் மேற்​கொண்டு வரு​கிறது.

இந்நிலையில் கடந்த திமுக ஆட்​சிக்​காலத்​தில் விடப்​பட்ட கோயில் டெண்​டர்​களில் முறை​கேடு​கள் நடந்​த​தாக​வும், ஒரு குறிப்​பிட்ட தரப்​பினருக்கு மட்​டுமே ஆதர​வாக டெண்​டர்​கள் வழங்​கப்​பட்​ட​தாக​வும் புகார்​கள் எழுந்​தன. இதையடுத்​து, அறநிலை​யத் துறை​யில் நில​வும் டெண்​டர் நடை​முறை​களைச் சீரமைக்க அதி​காரி​கள் முடிவு செய்​துள்​ளனர்.

அந்த வகை​யில், புதிய வழி​காட்டு நெறி​முறை​கள் வகுக்​கப்​படும் வரை, இந்து சமய அறநிலை​யத் துறை​யின் அனைத்து டெண்​டர் நடவடிக்​கைகளும் தற்​காலிக​மாக நிறுத்தி வைக்​கப்​பட்​டுள்​ள​தாக தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

சமீபத்​தில் ஒருதலைப்​பட்​ச​மாக வழங்​கப்​பட்​ட​தாகக் கருதப்​படும் சில கோயில் டெண்​டர்​களை ரத்து செய்​யத் துறை செய​லா​ளர் குமரகுருபரன் உத்​தர​வு பிறப்பித்துள்​ளார்.

டெண்டர் விடு​வ​தில் எவ்​வித பாரபட்​ச​மும் இருக்​கக்​கூ​டாது என்​ப​தற்​காக, தற்​போதைய நடை​முறை​கள் திருத்​தி​யமைக்​கப்​பட்டு வரு​கின்​றன.

விரை​வில் புதிய மற்​றும் வெளிப்​படை​யான வழி​காட்டு நெறி​முறை​களை அறநிலை​யத் துறை வெளி​யிட​வுள்​ள​தாக தகவல் வெளி​யாகி​யுள்​ளது.

SCROLL FOR NEXT