தமிழகம்

செப்.1-ல் மாற்றத்துக்கான பேரணி: ஏஐடியுசி பொதுச் செயலாளர் தகவல்

செய்திப்பிரிவு

திருச்சி: டெல்​லி​யில் செப்​.1-ல் ‘பத்​லாவ்’ என்​கிற பெயரில் மாற்​றத்​துக்​கான பேரணியை நடத்த உள்​ளோம் என இந்​திய கம்​யூனிஸ்ட் கட்​சி​யின் மத்​திய செயற்​குழு உறுப்​பினரும், ஏஐடி​யுசி அகில இந்​திய பொதுச் செய​லா​ள​ரு​மான அமர்​ஜித் கவுர் தெரி​வித்​துள்​ளார்.

திருச்சி மிளகு​பாறை​யில் உள்ள இந்​திய கம்​யூனிஸ்ட் கட்சி மாவட்ட அலு​வல​கத்​தில் நேற்று சுதந்​திர தின கொடியை ஏற்​றிய அமர்​ஜித் கவுர், பின்​னர் செய்​தி​யாளர்​களிடம் தெரி​வித்​தது: நமது நாட்​டின் சுதந்​திரம், மதச்​சார்​பின்​மை, இறை​யாண்மை தற்​போது அச்​சுறுத்​தலுக்கு உள்​ளாகி​யுள்​ளது.

போராட்​டம் நடத்​த​வும், நமது குரலை எழுப்​புவதற்​கு​மான அடிப்​படை உரிமை​களும், நாட்​டின் ஒற்​றுமை​யும் நெருக்​கடி​யில் உள்​ளன. சுதந்​திர தின உரை​யில் தன்​னைத் தானே பிரதமர் மோடி புகழ்ந்​து​கொண்​டார். அவர் கூறும் பல்​வேறு சாதனை​கள் அனைத்​தும் மிகைப்​படுத்​தப்​பட்ட கூற்​றுகள்.

எரிபொருள் உள்​ளிட்ட அத்​தி​யா​வசிய பொருட்​களின் விலை​யேற்​றம், வேலை​யின்மை உள்​ளிட்ட பல்​வேறு பிரச்​சினை​களுக்​காக அனைத்​துத் தரப்பு மக்​களும், ஜென் சீ, ஜென் ஆல்பா தலை​முறை​யினரும் வீதி​யில் இறங்​கிப் போராடி வரு​கிறார்​கள்.

நமக்கு மாற்​றம் தேவை. எனவே, ‘பத்​லாவ்’ என்​கிற பெயரில் நாங்​கள் மாற்​றத்​துக்​கான பேரணியை செப்​.1-ல் டெல்​லி​யில் நடத்த உள்​ளோம். புதிய சுவாசத்தை இந்​தி​யா​வுக்கு கொண்​டு​வரு​வது​தான் இதன் நோக்கம் என்றார்.

SCROLL FOR NEXT