அதிமுக அலுவலகம்

 
தமிழகம்

தவெக அரசின் மடைமாற்று அரசியலுக்கு துணைபோக மாட்டோம்: அதிமுக

தொகுதி மறுவரையறை ஆலோசனைக் கூட்டம் மீது விமர்சனம்

தமிழினி

சென்னை: “தாக்கல் செய்யப்படாத தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு அவசர அவசரமாக எம்.பி.க்கள் கூட்டத்தை நடத்தும் தவெக அரசின் மடைமாற்று அரசியலுக்கு அதிமுக துணை போகாது” என்று அக்கட்சி தெரிவித்துள்ளது.

இது குறித்து அதிமுக ஐடி விங் தனது எக்ஸ் தள பதிவில், ‘தொகுதி மறுவரையறை குறித்த புதிய மசோதா எதுவும் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படாத, அதற்கான எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இல்லாத நிலையில், எதற்காக தமிழக முதல்வர் அவசர அவசரமாக எம்.பி.க்கள் கூட்டம் என்ற பெயரில் ஒரு நாடகத்தை அரங்கேற்றுகிறது?

கண்முன்னே நடக்கும் காவிரி - மேகேதாட்டு பிரச்சினைக்கு அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட அனைத்து எதிர்க்கட்சிகளும் கோரியுள்ள நிலையில், அவற்றை எல்லாம் உதாசினப்படுத்திவிட்டு இந்த அரசின் முதல்வர், எதற்காக தாக்கல் செய்யப்படாத மசோதாவுக்கு கூட்டத்தை நடத்துகிறார்?

இன்று வரை மேட்டூர் அணை திறக்கப்படவில்லை. டெல்டா மாவட்டங்களில் தண்ணீர் இல்லை. விவசாயிகள் கண்ணீருக்கு பதில் சொல்லாமல் இந்த அரசு நடத்தும் மடைமாற்று அரசியல் அரங்கேற்றத்துக்கு அதிமுக ஒருபோதும் துணை போகாது’ என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT