மேட்டூர் அணை நீர்மட்டம் 99.84 அடியாக சரிந்த நிலையில், இடதுகரையில் உள்ள 16 கண் மதகு பகுதியின் கீழ் நீர்மட்டம் குறைந்து காணப்பட்டது.

 
தமிழகம்

443 நாட்களுக்கு பிறகு மேட்டூர் நீர்மட்டம் 100 அடிக்கு கீழ் சரிவு

செய்திப்பிரிவு

மேட்​டூர் / தரு​மபுரி: மேட்டூர் அணை நீர்​மட்​டம் 443 நாட்​களுக்கு பிறகு 100 அடிக்கு கீழ் சரிந்​தது. அணை​யில் இருந்து டெல்டா பாசனத்​துக்கு நீர் திறப்பு விநாடிக்கு 6,000 கனஅடி​யாக குறைக்​கப்​பட்​டுள்​ளது.

மேட்டூர் அணை​யில் இருந்து டெல்டா பாசனத்​துக்கு 2025 ஜூன் 12-ல் தண்​ணீர் திறக்​கப்​பட்​டது. அப்​போது, அணை​யின் நீர்​மட்​டம் 114.91 அடி​யாக​வும், நீர் இருப்பு 85.58 டிஎம்​சி​யாக​வும், நீர்​வரத்து 6,339 கன அடியாக​வும் இருந்​தது.

தொடர்ந்​து, கனமழை​யால் கர்​நாட​கா​வில் உள்ள கபினி, கேஆர்​எஸ் அணை​கள் நிரம்​பின. காவிரி​யில் உபரி நீர் திறக்​கப்​பட்​ட​தால் மேட்டூர் அணை முழு கொள்​ளள​வான 120 அடியை ஜூன் 29-ம் தேதி எட்​டியது.

இதையடுத்து அணை​யின் 16 கண் மதகு​கள் வழி​யாக உபரிநீர் வெளி​யேற்​றப்​பட்​டது. தொடர் மழை​யால் மேட்டூர் அணை 7 முறை முழு கொள்​ளளவை எட்​டியது. பின்​னர், காவிரி நீர்ப்​பிடிப்​புப் பகு​தி​களில் மழை குறைந்​த​தால் நீர்​வரத்து சரிந்​து, அணை​யின் நீர்​மட்​டம் குறைந்து வரு​கிறது.

2024 அக். 23-ம் தேதி மேட்டூர் அணை நீர்​மட்​டம் 100 அடியை எட்​டியது. நேற்று காலை வரை 443 நாட்​களாக அணை​யின் நீர்​மட்​டம் 100 அடிக்கு மேல் நீடித்து சாதனை படைத்த நிலை​யில், நேற்று காலை நீர்​மட்​டம் 99.84 அடி​யாக​வும், நீர் இருப்பு 64.63 டிஎம்​சி​யாக​வும் குறைந்​தது.

தண்ணீர் திறப்பு குறைப்பு: அணைக்கு விநாடிக்கு 208 கனஅடி​யாக நீர்​வரத்து இருந்த நிலை​யில், டெல்டா பாசனத்​துக்கு நீர் திறப்பு நேற்று மாலை 6 மணி முதல் விநாடிக்கு 8,000 கனஅடியி​லிருந்து 6,000 கனஅடி​யாக குறைக்​கப்​பட்​டுள்​ளது. கால்​வாய் பாசனத்​துக்கு 400 கனஅடி தண்​ணீர் திறக்​கப்​படு​கிறது.

ஒகேனக்​கல் காவிரி​யில் விநாடிக்கு 2,000 கனஅடி​யாக இருந்த நீர்​வரத்து நேற்று முன்​தினம் காலை 3,000 கனஅடி​யாக அதி​கரித்​தது. அதே​ நேரத்​தில், நேற்று காலை மீண்​டும்​ 2,000 கனஅடி​யாக குறைந்​தது.

SCROLL FOR NEXT