தமிழகம்

சீருடையுடன் கடைகளில் பொருள் வாங்கக் கூடாது: போக்குவரத்து போலீஸாருக்கு கூடுதல் காவல் ஆணையர் அறிவுரை

செய்திப்பிரிவு

சென்னை: சென்னை போக்​கு​வரத்து காவல் கூடு​தல் ஆணை​ய​ராக சமீபத்​தில் பொறுப்​பேற்ற சாமுண்​டீஸ்​வரி, போக்​கு​வரத்து போலீ​ஸாருக்கு ‘வாக்​கி-​டாக்​கி’ மூலம் பல்​வேறு ஒழுக்க விதி​முறை​கள் மற்​றும் பணிக்​கான அறி​வுரைகளை வழங்​கி​யுள்​ளார்.

அதில் அவர் கூறி​யிருப்​ப​தாவது: சட்​டம்​-ஒழுங்கு போலீ​ஸாரை விட, பொது​மக்​களை அதி​க​மாக சந்​திக்​கும் வாய்ப்பு போக்குவரத்து போலீ​ஸாருக்கே உள்​ளது.

தற்​போது பெரும்​பாலானோர் செல்​போன் பயன்​படுத்​து​வ​தால், நல்ல செயல்​களை​யும் தவறான செயல்​களை​யும் உடனுக்​குடன் வீடியோ எடுத்து சமூக வலை​தளங்​களில் பதிவேற்​றுகின்​றனர்.

எனவே, பொது​மக்​களிடம் போலீ​ஸார் மிக​வும் பொறுப்​புட​ன் நடந்​து​கொள்ள வேண்​டும். சிலர் சீருடையை சுத்​த​மாக அணி​யாமல் பணி​யில் ஈடு​படு​வது கவலைக்​குரியது. அனைத்து போக்​கு​வரத்து காவல் நிலை​யங்​களி​லும் ஆய்வு மேற்​கொள்​ளப்​படும்.

மேலும் பெண் போலீ​ஸார் பணி​யில் இருக்​கும் போது நகைகள் அணி​யக் கூடாது என்ற விதி​முறை உள்​ளது. அதை கடைபிடிக்க வேண்​டும். மெரினா கடற்​கரை காம​ராஜர் சாலை வழி​யாக நான் ஒரு​முறை சென்​ற​போது போக்​கு​வரத்து போலீஸ்​ ஒரு​வர் சீருடை​யுடன் கடை​யில் மீன் வாங்​கிக் கொண்​டிருந்​ததை பார்த்​தேன்.

பணி​யில் இருந்​தா​லும், பணி முடிந்து வீட்​டுக்கு திரும்​பிக் கொண்​டிருந்​தா​லும், சீருடை அணிந்த நிலை​யில் எந்​தக் கடை​யிலும் பொருட்​களை வாங்​கக் கூடாது.

சீருடை​யுடன் பணம் கொடுத்து பொருட்​கள் வாங்​கி​னாலும், பொது​மக்​கள் அதை இலவச​மாக வாங்​கு​வ​தாக தவறாக கருதும் வாய்ப்பு உள்​ளது.

ஒரு போலீஸ்​காரரின் தவறான செயல், ஒட்​டுமொத்த காவல் துறை​யின் நற்​பெயருக்​கும் களங்​கம் ஏற்​படுத்​தும் என்​ப​தால், அனை​வரும் தங்​களது நடத்தை மற்​றும் ஒழுக்​கத்​தில் கூடு​தல் கவனம் செலுத்த வேண்​டும். இந்த உத்​தர​வு​களை அனைத்து போக்​கு​வரத்து போலீ​ஸாரும் தவறாமல் கடைபிடிக்க வேண்​டும். இவ்​வாறு கூடு​தல் காவல் ஆணை​யர்​ சா​முண்​டீஸ்​வரி அறி​வுறுத்​தி​யுள்​ளார்​.

SCROLL FOR NEXT