தமிழகம்

தமிழக அரசு - மக்கள் மாளிகை இடையே இணக்கமான சூழல்: ஆளுநர் அர்லேகர் விவரிப்பு

‘இருமுறை தேசிய கீதம் இசைக்கப்பட்டது சரித்திர நிகழ்வு’

அனலி

சென்னை: “முதல் முறையாக சட்டப்பேரவையில் ஆளுநர் உரையின் தொடக்கத்திலும், ஆளுநர் உரையின் இறுதியிலும் தேசிய கீதம் பாடப்பட்ட சரித்திர நிகழ்வானது, மாநில அரசு மற்றும் மக்கள் மாளிகை இடையே இணக்கமான சூழல் நிலவ வேண்டும் என்ற தமிழக மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து, மக்களாட்சியின் மாண்பை நிலை நாட்டும் விதமாக அமைந்துள்ளது” என்று தமிழக ஆளுநர் ஆர்.வி.அர்லேகர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஆளுநர் மாளிகை எக்ஸ் பக்கத்தில் பகிரப்பட்ட பதிவில், ‘தமிழ்நாடு சட்டமன்றத்தில் புதிய உதயம் தோன்றிய நாள் இன்று என்பதை மக்களுக்கு மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு ஆளுநரின் முழு உரையும் எவ்வித இடையூறும் இன்றி, சட்டமன்றத்தில் இன்று வாசிக்கப் பெற்றது மன நிறைவைத் தருகிறது.

மேலும், முதல் முறையாக சட்டசபையில் ஆளுநர் உரையின் தொடக்கத்திலும், ஆளுநர் உரையின் இறுதியிலும் தேசிய கீதம் பாடப்பட்ட சரித்திர நிகழ்வானது, மாநில அரசு மற்றும் மக்கள் மாளிகை இடையே இணக்கமான சூழல் நிலவ வேண்டும் என்ற தமிழக மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து, மக்களாட்சியின் மாண்பை நிலை நாட்டும் விதமாக அமைந்துள்ளது என்றால் அது மிகையல்ல.

ஜனநாயகத்தில் ஆளப்படும் ஆட்சியானது, ஒருங்கிணைந்த, இணக்கமான உறவை அனைத்து தரப்பிலும் நிலைநாட்டி, மக்களின் எதிர்பார்ப்புகளை, தேவைகளை பூர்த்தி செய்வதையே ஓர் நிலையான, முன்னுதாரணமான அரசானது தனது நோக்கமாகக் கொண்டு செயல்பட வேண்டும் என்ற இலக்கை நோக்கி நாம் அனைவரும் இணைந்து பயணிக்கத் தொடங்கியுள்ளோம் என்பது மனதுக்கு நிறைவைத் தருகிறது’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்​டப்​பேர​வை​யின் ஆண்டு முதல் கூட்​டம் ஆளுநர் உரையுடன் தொடங்​கு​வது வழக்​கம். அதன்​படி கடந்த ஜனவரி மாதம் அப்​போதைய ஆளுநர் ஆர்​.என்​.ரவி தலை​மை​யில் சட்​டப்​பேர​வைக் கூட்​டம் தொடங்​கியது. ஆளுநர் ரவி, வந்தே மாதரம் பாடல் இசைக்​கப்​ப​டாததை சுட்​டிக்​காட்​டி, அரசு தயாரித்து அளித்த உரையைப் பேரவை​யில் வாசிக்​காமல் வெளி​யேறி​னார். அதன்​பின், அரசு தயாரித்து அளித்த உரை மட்​டுமே பேர​வைக் குறிப்பில் இடம்​பெற வேண்​டும் என்​ப​தற்​கான தீர்​மானம் நிறைவேற்​றப்​பட்டு அப்​போதைய பேர​வைத் தலை​வர் மு.அப்பாவு தமிழ் உரையை வாசித்​தார்.

அதற்​குப் பிறகு சட்​டப்​பேர​வைப் பொதுத்​தேர்​தல் நடைபெற வேண்​டிய நிலை​யில், அப்​போதைய திமுக அரசு இடைக்​கால பட்ஜெட் தாக்​கல் செய்​தது. சட்​டப்​பேரவைப் பொதுத் தேர்​தல் முடிந்​து, தவெக 108 இடங்​களில் வெற்றி பெற்​றது. 

இந்​நிலை​யில், தமிழகத்​தின் 17–வது சட்​டப்​பேர​வைக் கூட்டம் ஆளுநர் ஆர்​.​வி.அர்​லேகர் தலை​மை​யில் இன்று காலை 10 மணிக்குத் தொடங்கியது. முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. பின்னர் தேசிய கீதம் பாடப்பட்டது. ஆளுநர் உரை முடிந்தபின்னரும் தேசிய கீதம் மீண்டும் இசைக்கப்பட்டது.

இதைச் சுட்டிக்காட்டியே மாநில அரசுடன் இணக்கமான சூழல் உருவாகியுள்ளதாக ஆளுநர் அர்லேகர் நெகிழ்ச்சியுடன் ட்வீட் செய்துள்ளார்.

SCROLL FOR NEXT