தமிழகம்

சென்னை திரும்பினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

செய்திப்பிரிவு

தமிழகத்தில் வரும் 2024-ம் ஆண்டில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற உள்ளது. இதில் பங்கேற்குமாறு முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுக்கும் வகையில் 9 நாள் அரசு முறைபயணமாக கடந்த 23-ம் தேதி சிங்கப்பூர், ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்றார். அங்கு பல்வேறு நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.

இந்நிலையில், வெளிநாட்டு பயணத்தை முடித்துக் கொண்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று இரவு சென்னை திரும்பினார். விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

SCROLL FOR NEXT