சென்னை: அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நாளை (ஏப்.20) நடைபெறுகிறது. இதற்காக மாவட்ட செயலாளர்களுக்கு தொலைபேசி மூலம் அழைப்பு விடுக்கப் பட்டுள்ளது.
ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடைபெறும் இக்கூட்டத்துக்கு பொதுச்செயலாளர் பழனிசாமி தலைமையேற்கிறார்.
நாடாளுமன்ற தேர்தல் வரும் சூழலில், 50 லட்சத்துக்கும் அதிகமான புதிய உறுப்பினர்களை சேர்ப்பதுடன், நாடாளுமன்ற தேர்தலுக்கான பூத் கமிட்டி அமைப்பதும், அதில் ஏற்கெனவே இருந்தவர்களை மாற்றிவிட்டு, துடிப்புடன் செயல்படும் புதியவர்களை நியமிக்க ஏற்கெனவே முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து இக் கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என்று கூறப்படுகிறது.