வரைவு வாக்காளர் பட்டியல் விவரங்களை சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் நேற்று வெளியிட்டார். உடன் கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரி தர்.படம்: ம.பிரபு

 
தமிழகம்

மாவட்ட வாரியாக வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு: தமிழகத்தில் 97 லட்சம் பேர் நீக்கம்

தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தகவல்

செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்​தில் சிறப்பு தீவிர திருத்​தப் பணி​களை தொடர்ந்து வெளி​யிடப்​பட்ட வரைவு வாக்​காளர் பட்​டியலில் 97.37 லட்​சம் பேரின் பெயர்​கள் நீக்​கப்​பட்​டுள்​ளன. கடந்த அக்​.27-ம் தேதி நில​வரப்​படி, 6.41 கோடி வாக்​காளர்​கள் இருந்த நிலை​யில், தற்​போது 5.44 கோடி வாக்​காளர்​கள் இருப்​ப​தாக தமிழக தலைமை தேர்​தல் அதி​காரி அர்ச்​சனா பட்​நாயக் தெரி​வித்​துள்​ளார்.

தமிழகத்​தில் வாக்​காளர் பட்​டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்​ஐஆர்) பணி​கள் கடந்த அக்​. 27-ம் தேதி இந்​திய தேர்​தல் ஆணை​யத்​தால் அறிவிக்​கப்​பட்​டது. நவ.4-ம் தேதி எஸ்​ஐஆர் பணி​கள் தொடங்​கின. இப்​பணி​யில் 68 ஆயிரம் வாக்​குச்​சாவடி நிலை அலு​வலர்​கள் (பிஎல்ஓ) ஈடு​படுத்​தப்​பட்​டனர். அவர்​கள் வீடு வீடாக சென்று, எஸ்​ஐஆர் படிவங்​களை வழங்​கி, ஆய்வு செய்​து, பூர்த்தி செய்த படிவங்​களை கணினி​யில் பதிவேற்​றினர். இப்​பணி​கள் கடந்த டிச.14-ம் தேதி நிறைவடைந்​தன.

ஏற்​கெனவே அறி​வித்​த​படி, தமிழகத்​தில் உள்ள 234 தொகு​தி​களுக்​கான வரைவு வாக்​காளர் பட்​டியல்​களை, சம்​பந்​தப்​பட்ட தொகு​தி​கள் இடம்​பெற்​றுள்ள மாவட்​டங்​களின் ஆட்​சி​யர்​கள், அங்​கீகரிக்​கப்​பட்ட கட்​சிகளின் பிர​தி​நி​தி​கள் முன்​னிலை​யில் நேற்று வெளி​யிட்​டனர். இதுதொடர்​பாக சென்​னை​யில் செய்​தி​யாளர்​களிடம் தமிழக தலைமை தேர்​தல் அதி​காரி அர்ச்​சனா பட்​நாயக் நேற்று கூறிய​தாவது:

வாக்​காளர் பட்​டியல் சிறப்பு தீவிர திருத்​தப் பணி​யில், கணக்​கெடுப்பு பணி நிறைவுற்று வரைவு வாக்​காளர் பட்​டியல்​கள் வெளி​யிடப்​பட்​டுள்​ளன. அனைத்து வாக்​குச்​சாவடி மையங்​கள், சிறப்பு முகாம்​களி​லும் மக்​கள் பார்​வைக்​காக இந்த ​பட்​டியல் வைக்​கப்​படும். www.elections.tn.gov.in என்ற இணை​யதளத்​தி​லும் வெளி​யிடப்​படும். இதில் மக்​கள் தங்​களது பெயர் மற்​றும் குடும்​பத்​தில் உள்ள வாக்​காளர்​களின் பெயர்​ விவரங்​களை சரி​பார்த்​துக் கொள்​ளலாம்.

ஜன.18 வரை விண்ணப்பம்: இந்த பட்​டியலின் அடிப்​படை​யில், தகு​தி​யுள்ள வாக்​காளர்​களை புதி​தாக சேர்க்க அல்​லது தகு​தி​யற்ற வாக்​காளர்​களை நீக்க எந்த ஒரு வாக்​காள​ரும், அரசி​யல் கட்​சி​யும் தங்​கள் ஆட்​சேபனை​களை டிச.19-ம் தேதி (நேற்​று) முதல் ஜன 18-ம் தேதி வரை தாக்​கல் செய்​ய​லாம். இதை ஆய்வு செய்ய 234 வாக்​காளர் பதிவு அலு​வலர்​கள், 1,776 உதவி வாக்​காளர் பதிவு அலு​வலர்​கள் பணி​யில் உள்​ளனர்.

இந்த கால​கட்​டத்​தில், வரைவு வாக்​காளர் பட்​டியலில் இடம் பெறாதவர்​கள், வரும் ஜன.1-ம் தேதி 18 வயது பூர்த்தி அடைந்த இளம் வாக்​காளர்​கள் படிவம் 6-ஐ பூர்த்தி செய்து வழங்​கலாம். வாக்​காளர் பட்​டியலில் நிரந்தர இடமாற்ற பதிவு​கள், உயி​ரிழந்​தோர் உள்​ளிட்ட ஆட்​சேபனை தொடர்​பாக படிவம் 7-ஐ பூர்த்தி செய்​தும், தொகு​தி​களி​லேயே ஒரு இடத்​தில் இருந்து மற்​றொரு இடத்​துக்கு குடிபெயர்ந்து புதிய வசிப்​பிடத்​தில் உள்​ளவர்​களும், வேறு தொகு​திக்கு குடிபெயர்ந்​தவர்​களும் படிவம் 8-ஐ பூர்த்தி செய்​தும், அதற்​கான ஆவண ஆதார நகல்​களை இணைத்து சம்​பந்​தப்​பட்ட சட்​டப்​பேரவை தொகு​திக்கு உட்​பட்ட, தொடர்​புடைய பகு​திக்​கான வாக்​காளர் பதிவு அலு​வலரிடம் சமர்ப்​பிக்​கலாம்.

அனைத்து வாக்​குச்​சாவடி மையங்​களில் சிறப்பு முகாம்​ நடை​பெறும்​போது உரிய படிவங்​களை பிஎல்​ஓக்​களிட​மும் சமர்ப்​பிக்​கலாம். www.elections.tn.gov.in என்ற இணை​யதளம் மூல​மாக​வும், பெயர் சேர்த்​தல், நீக்​கம், திருத்​தங்​கள் மேற்​கொள்​ளலாம். தமிழகத்​தில் 68,467 வாக்​குச்​சாவடிகள் இருந்த நிலை​யில், தற்​போது புதி​தாக 6,568 வாக்​குச் ​சாவடிகள் உரு​வாக்​கப்​பட்​டு, மொத்​தம் 75,035 சாவடிகள் அமைக்​கப்​பட்​டுள்​ளன.

தமிழகத்​தில் கடந்த அக்​.27 நில​வரப்​படி, 6 கோடியே 41 லட்​சத்து 14 ஆயிரத்து 584 வாக்​காளர்​களின் பெயர்​கள் இடம்​பெற்​றிருந்​தன. நடந்து முடிந்த எஸ்​ஐஆர் திருத்​தத்​தின்​படி, தமிழகத்​தில் 2,66,63,233 ஆண் வாக்​காளர்​கள், 2,77,06,332 பெண் வாக்​காளர்​கள், 7,191 இதர வாக்​காளர்​கள் என மொத்​தம் 5 கோடியே 43 லட்​சத்து 76 ஆயிரத்து 756 வாக்​காளர்​களின் பெயர்​கள் வரைவுவாக்​காளர் பட்​டியலில் இடம் பெற்​றுள்​ளன.

உயிரிழந்த வாக்​காளர்​கள் 26,95,672 பேர், இடம்​பெயர்ந்​தோர் மற்​றும் குறிப்​பிட்ட முகவரி​யில் வசிக்​காத 66,44,881 பேர், இரட்டை பதிவு வாக்​காளர்​கள் 3,98,278 பேர் என மொத்​தம் 97 லட்​சத்து 37 ஆயிரத்து 831 வாக்​காளர்​களின் பெயர்​கள் நீக்​கப்​பட்​டுள்​ளன. அதி​கபட்​ச​மாக சோழிங்​கநல்​லூர், பல்​லா​வரம், ஆலந்​தூர் தொகு​தி​களில் வாக்​காளர்​கள் நீக்​கப்​பட்​டுள்​ளனர்.

இந்த எஸ்​ஐஆர் பணி​களின்​போதே 5.19 லட்​சத்​துக்​கும் மேற்​பட்​டோரிடம் இருந்து படிவம்-6 பெறப்​பட்​டுள்​ளது. வாக்​காளர் பட்​டியலில் பெயர் இடம்​பெறாதவர்​கள் ஜன18-ம் தேதிக்​குள் விண்​ணப்​பிக்​கலாம், ஆட்​சேபனை​களை​யும் வழங்​கலாம். இவ்​வாறு அவர் கூறி​னார்.

எஸ்​ஐஆர் பணி​களில் அதி​கபட்​ச​மாக சென்னை மாவட்​டத்​தில் 14.25 லட்​சம் பேரும், குறைந்​த​பட்​ச​மாக அரியலூர் மாவட்​டத்​தில் 24,368 பேரும் நீக்​கப்​பட்​டுள்​ளனர். அதி​கபட்​ச​மாக சோழிங்​கநல்​லூர் தொகு​தி​யில் 2.18 லட்​சம் வாக்​காளர்​களின் பெயர்​கள் நீக்​கப்​பட்​டுள்​ளன. தேர்​தல் ஆணை​யம் சார்​பில் வரும் ஜன.18-ம் தேதி வரை பெறப்​படும் படிவங்​கள் பரிசீலிக்​கப்​பட்​டு, வரும்​ பிப்​ர​வரி மாதம்​ இறுதி ​வாக்​காளர்​ பட்​டியல்​ வெளியிடப்​பட உள்​ளது.

சர்வர்கள் முடங்கின: தங்கள் பெயர், வரைவு வாக்காளர் பட்டியலில் உள்ளதா எனதேர்தல் ஆணையம் மற்றும் தமிழக தலைமை தேர்தல் அலுவலக இணையதளங்களை பொதுமக்கள் நேற்று மாலை முதல் பார்வையிட்ட நிலையில், அந்த இணையதளங்களின் சர்வர்கள் முடங்கின.

குஜராத்தில் 73.73 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்: நாடு முழுவதும் 12 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் எஸ்ஐஆர் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. ஒவ்வொரு மாநிலமாக வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு வருகிறது. குஜராத்தில் ஏற்கெனவே 5.08 கோடி வாக்காளர்கள் இருந்தனர். அங்கு எஸ்ஐஆர் பணிகள் நவ.4-ம் தேதி தொடங்கி, கடந்த 14-ம் தேதி வரை படிவங்கள் பெறப்பட்டன. நேற்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் 73.73 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 18 லட்சம் பேர் உயிரிழந்தவர்கள். அங்கு வாக்காளர்கள் எண்ணிக்கை 4.34 கோடியாக குறைந்துள்ளது. இதேபோல, மேற்கு வங்கத்தில் 58.20 லட்சம் பேர் நீக்கப்பட்டுள்ளனர். இதுவரை வெளியான பட்டியல்படி, தமிழகத்தில் தான் அதிகபட்சமாக 97.37 லட்சம் பேர் நீக்கப்பட்டுள்ளனர்.

SCROLL FOR NEXT