தமிழகம்

தண்ணீர் பந்தல் அமைக்க பாஜகவினருக்கு அண்ணாமலை அறிவுரை

செய்திப்பிரிவு

சென்னை: கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில், தண்ணீர், மோர் பந்தல்களை அமைக்க வேண்டும் என்று பாஜக நிர்வாகிகளுக்கு, கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிவுறுத்தி உள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில், மக்களின் தாகத்தை தீர்த்து, களைப்பை போக்கும் வகையில், ஆண்டுதோறும் பாஜகவினர் தண்ணீர், நீர் மோர் பந்தல்கள் அமைப்பது வழக்கம்.

அதேபோல, நடப்பாண்டும் தண்ணீர், மோர் பந்தல்கள் அமைக்கும் பணியில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் ஈடுபட வேண்டும். மக்கள் தேடி வந்து, அவற்றைப் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் நல்ல சூழலை உருவாக்கி தர வேண்டும். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT