தமிழகம்

அந்நியச் செலாவணி மோசடி வழக்கு: சசிகலா பெங்களூரு சிறையில் இருந்தபடி காணொலி காட்சியில் ஆஜராக அனுமதி - எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு

செய்திப்பிரிவு

அந்நியச் செலாவணி மோசடி வழக்கில் சசிகலா மீதான குற்றச்சாட்டைப் பதிவுசெய்ய, பெங்களூரு சிறையில் இருந்தபடி காணொலி காட்சி மூலம் அவர் ஆஜராகலாம் என்று எழும்பூர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

ஜெஜெ டிவிக்கு வெளிநாட்டில் இருந்து உபகரணங்கள் வாங்கிய தில் அந்நியச் செலாவணி மோசடி யில் ஈடுபட்டதாக வி.கே.சசிகலா, அவரது சகோதரி மகன் பாஸ்கரன் மற்றும் ஜெஜெ டிவி நிர்வாகம் மீது அமலாக்கத் துறையினர் கடந்த 1996-ல் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு கடந்த 20 ஆண்டு களுக்கு மேலாக எழும்பூர் நீதிமன் றத்தில் நிலுவையில் உள்ளது.

இந்த வழக்கு விசாரணை ஏற்கெனவே முதலாவது பொரு ளாதார குற்றவியல் நீதிமன்ற நீதிபதி ஜாகிர் உசேன் முன்பு நடந்தது. அப்போது சசிகலா தரப்பு வழக்கறிஞர், ‘‘சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டு பெங்களூரு சிறையில் சசிகலா இருக்கிறார். இந்த வழக்கில் குற்றச்சாட்டு பதிவு செய்வதற்காக அவரை காணொலி காட்சி மூலம் ஆஜர்படுத்த அனுமதிக்க வேண்டும்’’ என்றார்.

இதற்கு அமலாக்கத் துறை வழக்கறிஞர் கடும் ஆட்சேபம் தெரிவித்து, குற்றச்சாட்டு பதிவு செய்ய சசிகலா கட்டாயம் நேரில் தான் ஆஜராக வேண்டும் என்றார்.

இதையடுத்து, இந்த வழக்கில் குற்றச்சாட்டு பதிவுசெய்ய பெங்களூருவில் இருந்தபடியே சசிகலா காணொலி காட்சி மூலமாக ஆஜராக அனுமதி அளித்து நீதிபதி ஜாகிர் உசேன் நேற்று உத்தரவிட்டார். காணொலி காட்சி மூலமாக ஆஜரானதை எதிர்காலத்தில் தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள மாட்டேன் என்று சசிகலா பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யவும் உத்தரவிட்டு, விசாரணையை மே 18-ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

இந்த வழக்கில், பாஸ்கரன் மீதான குற்றச்சாட்டு நேற்று நீதி மன்றத்தில் பதிவு செய்யப்பட்டது.

SCROLL FOR NEXT