புதிதாக தொடங்கப்பட்ட 6 கூட்டுறவு சங்கங்கள் மற்றும் ஆட்சியரின் நிர்வாகத்தில் இருக்கும் 3 சங்கங்களில் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் தேர்தல் வரும் 31-ம் தேதி நடக்கும் என மாநில தேர்தல் ஆணையர் ம.ரா.மோகன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டின் கீழ்வரும் 3 சங்கங்கள், கைத்தறி மற்றும் துணி இயக்குநர் கட்டுப்பாட்டின் கீழ்வரும் 3 சங்கங்கள், மீன் வளத்துறை ஆணையரின் கீழ் வரும் ஒரு சங்கம், பால்பண்ணை அபிவிருத்தி ஆணையர் கட்டுப்
பாட்டின் கீழ்வரும் ஒரு சங்கம் மற்றும் தொழில்துறை ஆணையர் கட்டுப்பாட்டின் கீழ்வரும் ஒரு சங்கம் என மொத்தம் 9 சங்கங்களுக்கு 77 நிர்வாகக்குழு உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கவும், 9 தலைவர் மற் றும் 9 துணைத் தலைவர்களைத் தேர்ந்தெடுக்கவும் தேர்தல் அட்டவணையை தமிழ்நாடு மாநில கூட்டுறவு சங்கங்களின் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
இச்சங்கங்களின் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் வரும் 23-ம் தேதியும், வாக்குப்பதிவு வரும் 31-ம்தேதியும் நடைபெறும். தலைவர் மற்றும் துணைத் தலைவர்களுக்கான தேர்தல் ஜூன் 5-ம் தேதிநடைபெறும். இந்த 77 நிர்வாகக்குழு உறுப்பினர்களில் 8 இடங்கள் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி இனத்தவருக்கும், 22 இடங்கள் பெண்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன.நிர்வாகக்குழு உறுப்பினர்களுக் கான வேட்புமனுக்களை வரும் 23-ம்தேதி வரை தாக்கல் செய்யலாம். 24-ம் தேதி வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்படும். வேட்புமனுவை திரும்பப் பெற விரும்புவோர் வரும் 25-ம் தேதி பெற்றுக்
கொள்ளலாம். வேட்பாளர்களின் இறுதிப் பட்டியல் அன்று மாலை 5 மணிக்கு வெளியிடப்படும். போட்டி இருப்பின் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 31-ம் தேதி நடைபெறும்.
வாக்குகளை எண்ணும் பணி ஜூன் 1-ம் தேதி காலை 10 மணிக்குத் தொடங்கும். வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்டவுடன் முடிவுகள் அறிவிக்கப்படும். இக்கூட்டுறவு சங்கங்களின் தலைவர் மற்றும்
துணைத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் அறிவிப்பு வரும் 1-ம் தேதி வாக்கு எண்ணிக்கை முடிந்தவுடன் தேர்தல் அலுவலரால் வெளியிடப்படும். தலைவர் மற்றும்
துணைத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வரும் 5-ம் தேதிநடைபெறும். தேர்தல் நடைபெறவுள்ள கூட்டுறவு சங்கங்களின் பெயர் விவரங்களை >www.coopelection.tn.gov.in-ல் அறிந்துகொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறியுள்ளார்.