நாகை மாவட்ட மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் நடத்திய தாக்குதலில் 4 பேர் காயமடைந்தனர்.
வேதாரண்யம் அடுத்த ஆறுகாட்டுத்துறையைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன்(55) என்பவருக்குச் சொந்தமான பைபர் படகில் அதே ஊரைச் சேர்ந்த செந்தில்(35), குமரசாமி(48), அமுத குமார்(50), கலைமணி(24) ஆகிய மீனவர்கள் நேற்று முன்தினம் மதியம் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர்.
அன்று மாலை 6 மணி யளவில் கோடியக்கரைக்கு தென்கிழக்கே 17 கடல் மைல் தொலைவில் இந்திய கடல் எல்லைக்குள் அவர்கள் மீன் பிடித்துக் கொண்டு இருந்தனர்.
அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்கள் மீது கற்க ளாலும், கட்டையாலும் கடும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இதில் 4 மீனவர்களும் காய மடைந்தனர். அதையடுத்து, உடனடியாக கரை திரும்பிய மீனவர்கள் வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அளிக்கப்பட்ட முதலுதவிக் குப் பின் நாகை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு, அங்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து, கடலோர காவல் படையினர் மற்றும் மீன் வளத்துறைக்கு மீனவர்கள் சார்பில் தகவல் அளிக்கப்பட்டுள்ளது.