தமிழகம்

திருச்சி - திருவனந்தபுரம் இன்டர்சிட்டி ரயில் சேவையில் மாற்றம்

செய்திப்பிரிவு

திருச்சி: திருநெல்வேலி- திருவனந்தபுரம் ரயில் வழித் தடத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் காரணமாக திருச்சி- திருவனந்தபுரம் இடையே இயக்கப்பட்டு வரும் இன்டர்சிட்டி ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

திருச்சி ரயில் நிலையத்தில் இருந்து காலை 7.20 மணிக்குப் புறப்படும்(வண்டி எண்: 22627)ரயில், திருநெல்வேலி- திருவனந்தபுரம் இடையேயும், மறு மார்க்கத்தில் திருவனந்தபுரம் ரயில் நிலையத்தில் இருந்து முற்பகல் 11.35 மணிக்குப் புறப்படும்(வண்டி எண்: 22628) ரயில், திருவனந்தபுரம்- திருநெல்வேலி இடையேயும் பிப். 4 முதல் பிப்.9 மற்றும் பிப்.14 முதல் பிப்.17 ஆகிய தேதிகளில் ரத்து செய்யப்படுகிறது.

அதேவேளையில், திருநெல்வேலி ரயில் நிலையத்தில் இருந்து திருச்சிக்கு பிற்பகல் 2.30 மணிக்குப் புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT