கடலில் மீன்பிடித்துக் கொண்டி ருந்த புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் மீனவர்கள் 7 பேர் மீது இலங்கை கடற்படை யினர் நேற்று முன்தினம் இரவு தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து 5 நாட்களுக்குப் பிறகு புதுக்கோட்டை மாவட்டம் ஜெக தாப்பட்டினத்தில் இருந்து 199 விசைப்படகுகளில் ஆயிரக்கணக் கான மீனவர்கள் நேற்று முன் தினம் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். அதில், 2 படகுகளில் சென்ற மீனவர்கள் திலீப்(25), பழனிச்சாமி(35), ராபின்(19), பிரதீப்(28), பிரசாந்த்(21), முத்தையா(19) கலைக்குமார்(21) ஆகியோர் நெடுந்தீவு பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர் இவர் களை தாக்கியதுடன், படகுகள் மற்றும் வலைகளையும் சேதப் படுத்தியுள்ளனர். இதையடுத்து தாக்குதலுக்குள்ளான 7 மீனவர் களும் உடனே கரை திரும்பினர். அவர்களுக்கு மணமேல்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
ஜெகதாப்பட்டினம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்திய சம்பவம் புதுக் கோட்டை மாவட்ட மீனவர் களிடையே அச்சத்தை ஏற்படுத்தி யுள்ளது.