தமிழக சட்டப்பேரவை | கோப்புப் படம் 
தமிழகம்

தமிழக சட்டம் - ஒழுங்கு பிரச்சினை | பேரவையில் முதல்வர் - இபிஎஸ் விவாதம்

செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு நிலை தொடர்பாக பேரையில் முதல்வருக்கும் எதிர்க்கட்சி தலைவருக்கும் இடையே காரசார விவாதம் நடைபெற்றது.

தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடரில் இன்று (ஜன.11) ஆளுநர் உரையின் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இதில் கேள்வி நேரம் முடிந்த பிறகு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி எழுந்து, தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாக குற்றஞ்சாட்டினார்.

இதற்கு பதில் அளித்து பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின்," எதிர்க்கட்சி தலைவர் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதாக சொல்கிறார். அதிமுக ஆட்சியில் நடைபெற்ற சட்ட ஒழுங்கு பிரச்சினைகள் பட்டியல் வைத்துள்ளேன். பொத்தாம் பொதுவாக கூறாமல் ஆதாரத்துடன் கூற வேண்டும்" என்று தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து, சட்டம், ஒழுங்கு குறித்த முதல்வரின் பதிலுக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக உறுப்பினர்கள் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

SCROLL FOR NEXT