தமிழகம்

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வேளாங்கண்ணி பேராலயத்தில் சிறப்பு வழிபாடு: பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்பு

செய்திப்பிரிவு

இயேசு கிறிஸ்துவின் பிறப்பு பெருவிழாவான கிறிஸ்துமஸ் திருவிழா நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் சிறப்பு வழிபாடுகளுடன் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப் பட்டது.

விழாவையொட்டி, நேற்று முன்தினம் இரவு 11 மணிக்கு மெழுகுவர்த்தி ஏந்தியபடி ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் ஊர்வலமாக விண்மீன் ஆலயத்தை வந்தடைந்தனர். விண்மீன் ஆலயத்தில் பேராலய அதிபர் பிரபாகர் அடிகளார் தலைமையில் நள்ளிரவு சிறப்புக் கூட்டுத் திருப்பலி நடைபெற்றது.

தமிழ், ஆங்கிலம், மலையாளம், தெலுங்கு, கொங்கனி ஆகிய மொழிகளில் நடைபெற்ற திருப்பலி யின்போது, உலக சமாதானத் துக்காகவும், இந்தியாவின் நலனுக் காகவும் பிரார்த்தனை செய்யப் பட்டது.

அதையடுத்து, இயேசு கிறிஸ்து வின் பிறப்பைக் குறிக்கும் நிகழ்வு நடைபெற்றது. விண்ணில் இருந்து தேவகுமாரன் உதிக்கும் காட்சி நடைபெற்ற பின்னர், தொழுவத்தில் இருந்த தேவகுமாரனை பிரபாகர் அடிகளார் தொட்டிலில் இட்டார். அதனைத் தொடர்ந்து, சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.

கிறிஸ்துமஸ் தினமான நேற்று காலை 8 மணி முதல் ஒரு மணி நேரத்துக்கு ஒரு மொழியில் என கூட்டு திருப்பலி 6 மொழிகளில் நாள் முழுவதும் தொடர்ந்து நடைபெற்றது. இதில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபட்டனர்.

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு லட்சக்கணக்கான கிறிஸ்தவர்கள் வேளாங் கண்ணிக்கு வந்திருந்தனர். அவர் களுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் மாவட்ட நிர் வாகத்துடன் இணைந்து வேளாங் கண்ணி பேராலய நிர்வாகம் செய்திருந்தது.

புத்தாண்டு பிறப்பு வரை பக்தர்கள் தொடர்ந்து வேளாங் கண்ணிக்கு வந்து கொண்டிருப் பார்கள் என்பதால் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் துரை அறிவுறுத்தலின்படி மாவட்ட போலீஸார் பாதுகாப்பு ஏற்பாடு களை பலப்படுத்தியுள்ளனர்.

SCROLL FOR NEXT