சோவுடன் 1976-ம் ஆண்டு, ஜூன் மாதம் அவரது துக்ளக் பத்திரிகையில் பணிக்குச் சேர்ந்தேன். ஒரு பத்திரிகையாளனின் பணிகள் மற்றும் பொறுப்புகளை சோவுடன் பணியாற்றும்போதுதான் புரிந்து கொண்டேன்.
துக்ளக்கில் 1990-ம் ஆண்டு வரை நிரந்தரப் பணியாளனாக இருந்தேன். அதற்குப் பிறகு விலகி, வெளியிலிருந்து துக்ளக் பத்திரி கைக்கு கட்டுரைகள் எழுதிக் கொண்டிருக்கிறேன்.
சோ, முப்பதுக்கும் மேற்பட்ட நாடகங்களை எழுதி உள்ளார். சினி மாவில் முன்னணி கலைஞர்களுடன் நடித்தவர். எழுத்தாளர், விமர்சகர், சட்ட நிபுணர், சினிமா இயக்குநர் என பலப் பரிமாணங்கள் கொண்டவர். அபாரமான நகைச்சுவைத்திறன் உள்ளவர். சோவின் நகைச்சுவை யாரையும் புண்படுத்தாது. எந்த அரசியல் தலைவர்களை அவர் கிண்டல் செய்தாலும், அவர்களே அதை ரசிப்பதாக அவரது எழுத்து இருக்கும்.
துக்ளக்கில் வெளிவரும் கேள்வி- பதில் தொடங்கி ஒவ்வொரு கட்டு ரையையும் கண்ணில் விளக்கெண் ணெய் விட்டுப் பார்ப்பார்கள். அந்த மாதிரியான காலகட்டத்தில் அபாரமான துணிச்சலுடன் செயல் பட்டவராக சோ இருந்தார். ஏனெ னில் எந்த அரசியல்வாதியின் தய வையும் நாடாதவராக இருந்தார்.
மு.க.ஸ்டாலினுக்கு ஆறுதல்
1970-களின் ஆரம்பத்தில் திராவிடர் கழக மாநாடு நடைபெற்றது. அதையொட்டி சென்ற ஊர்வலத் தில், இந்துக்கள் வணங்கும் ராமன், கிருஷ்ணன் போன்ற தெய்வங்களை கேலிச்சித்திரங்களாக வரைந்து எடுத்துச் சென்றனர். அந்த ஊர் வலத்தைப் பற்றிய செய்தியுடன் புகைப்படங்களையும் துக்ளக் பத்திரிகையில் சோ விமர்சித்து வெளியிட்டிருந்தார்.
அப்போது கருணாநிதி தலைமையிலான அரசால், துக்ளக் பத்திரிகைப் பிரதிகள் பறிமுதல் செய்யப்பட்டன. அதே நேரத்தில் அவசரநிலைக் காலகட்டத்தில் கருணாநிதியின் மகன் ஸ்டாலின் போலீஸாரால் கைது செய்யப்பட்டு சித்திர வதைக்கு உள்ளாக்கப்பட்டபோது நேரடியாக போய் பார்த்து ஆறுதல் சொன்னவரும் அவர்தான். அந்த சமயத்தில் திமுக அரசு கலைக்கப்பட்டதையும் அவர் எதிர்த்தார்.
கருணாநிதிக்கு பேச்சுரிமை யும் எழுத்துரிமையும் மறுக்கப் பட்டதால், அவரை இனி விமர்சிக்க மாட்டேன் என்ற நிலைப்பாட்டை எடுத்தார்.
காமராஜர், மொரார்ஜி தேசாய், கருணாநிதி தொடங்கி ஜெயலலிதா வரை அவருக்கு நல்ல நட்பு இருந்தது. அவர்களது செயல்பாடு களில் ஏதாவது குறைபாடோ விமர்சனமோ இருந்தால் அதை காட்டமாக விமர்சிப்பார். இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது, அவர் தமிழ் பத்திரிகை ஒன்றுக்கு கொடுத்த ஒரே நேர்காணல் துக்ளக் பத்திரிகைக்குத்தான். மொரார்ஜி தேசாய், ராஜீவ் காந்தி, ஜெயவர்த் தனே என பல அரசியல் தலைவர் களின் விரிவான நேர்காணலைச் செய்தவர்.
தனிப்பட்ட முறையில் அவருக்கு எவர் மீதும் காழ்ப்புணர்ச்சி இருந்த தில்லை. அரசியல் தலைவர்களின் குடும்ப விவகாரங்களையோ, தனிப் பட்ட விஷயங்களைப் பற்றியோ இதுவரை ஒரு செய்திகூட வெளி யிட்டதில்லை.
தடைகளைத் தகர்த்த படம்
துக்ளக் வந்த காலகட்டத்தில் புலனாய்வு பத்திரிகைகள் இல்லை. சமூக அரசியல் இதழாக வெளி வந்த ஒரே இதழ் அப்போது துக்ளக் தான். கூவத்தைச் சீரமைக்கப் போவதாக திமுக அரசு அறிவித்த போது, அதுதொடர்பான ஆய்வுக் கட்டுரைகளையெல்லாம் முதல் முதலாக வெளியிட்ட இதழ் துக்ளக் தான்.
சோ எழுதிய ‘முகமது பின் துக்ளக்’ நாடகத்தை சினிமாவாக எடுத்தனர். அந்தச் செய்தி தெரிந்த வுடன், திமுக ஆட்சியாளர்களால் படத்தில் வேலைசெய்த தொழில் நுட்பக் கலைஞர்கள் அச்சுறுத்தப் பட்டனர். அத்தனை இடைஞ்சல் களையும் மீறி படம் வெளியானது.
இலங்கைத் தமிழர் பிரச்சினை உட்பட பல்வேறு அரசியல் விவ காரங்களில் அவர் சொன்ன வார்த் தைகள் தீர்க்கதரிசனமானவை.
1977-ல் அவசரநிலைக் காலகட்டத்துக்குப் பிறகு ஜனதா ஆட்சி மத்தியில் வந்தபோது, அந்த ஆட்சி நிலைப்பட வேண்டுமென்று மிகவும் உழைத்தவர்களில் ஒருவர் சோ. ஆனால் சரண்சிங் போன்ற வர்களின் செயல்பாடுகளைப் பார்த்து சீக்கிரமே இந்த அரசு கவிழ்ந்துவிடும் என்பதைக் கணித்த வரும் அவர்தான்.
கர்னாடக இசையில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். அருமையான புகைப்படக்கலைஞர் அவர். துக்ளக் கில் வெளிவரும் கார்ட்டூன் களுக்காக அவர் ஓவியர்களுக்கு கொடுக்கும் ஐடியாக்கள் வெவ் வேறு கோணத்தில் ஆச்சரியப் படும்படியாக இருக்கும்.
அரசியல் தலைவர்கள் குறித்து எத்தனையோ விமர்சனங்களை வைத்திருந்தாலும் அவர்களுடன் தனிப்பட்ட நட்பையும் அக்கறை யையும் பேணி வந்தவர். எல்லா வற்றையும்விட அவர் பெரிய மனிதாபிமானி. அதனால் தான் அவரது விமர்சனங்களை யாரும் தவறாக எண்ணியதே இல்லை.