தமிழகம்

தலைமை பொறுப்பை ஏற்க வேண்டும்: ஜெ.வின் அரசியல் வாரிசு சசிகலா மட்டுமே - தம்பிதுரை எம்.பி. கருத்து

செய்திப்பிரிவு

ஜெயலலிதாவின் அரசியல் வாரிசு சசிகலா மட்டுமே, எனவே, அவர்தான் கட்சித் தலைமைப் பொறுப்பை ஏற்க வேண்டும் என்று அதிமுக கொள்கை பரப்புச் செயலாளரும், மக்களவை துணைத் தலைவருமான மு.தம்பி துரை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறி யிருப்பதாவது:

தமிழக மக்களின் உயர்வுக் காகவும், மேன்மைக்காகவும் உரு வாக்கப்பட்ட ஒப்பற்ற இயக்கம் அதிமுக. சமூகநீதி காக்கவும், ஒடுக்கப்பட்ட மக்களின் உயர்வை உறுதி செய்யவும், சிறுபான்மை இன மக்களின் உரிமைகளை பாதுகாக்கவும், பெண்கள் வாழ்வில் மறுமலர்ச்சி ஏற்படவும், இந்திய குடியரசில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டவும் தன்னையே அர்ப்பணித்தவர் எம்.ஜி.ஆர்.

அவர் காட்டிய பாதையில் வாழ்ந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இன்று நம்மிடையே இல்லாத சூழலில் அதிமுகவை சிறப்புற வழிநடத்தும் தகுதி யும், ஆற்றலும், அறிவும், அனுபவமும் ஒருங்கே அமையப் பெற்றவர் சசிகலா மட்டுமே. ஜெயலலிதாவால் உரு வாக்கப்பட்ட அதிமுகவையும், அதன் ஒன்றரை கோடி தொண் டர்களையும் வழி நடத்தி காப்பாற்ற காலம் நமக்கு அளித்திருக்கும் கொடையாக சசிகலா திகழ்கிறார்.

கடந்த 35 ஆண்டுகளாக முன்னாள் முதல்வர் ஜெய லலிதாவோடு நெருங்கிப் பழகி, அவருடனேயே வாழ்ந்து அவருக்காக எல்லா வகையான தியாகங்களையும் செய்திருப் பவர் சசிகலா. அரசியல் காழ்ப் புணர்ச்சி காரணமாக போடப் பட்ட வழக்குகளில் சிறை சென்று, கொடுமைகளுக்கு ஆளான வர். அவருக்கு ஏற்பட்ட அச்சுறுத் தல்கள் அனைத்தில் இருந்தும் அவரை காப்பாற்றியவர், கட்சி நிர்வாகத்திலும், ஆட்சி நடத்துவதிலும் அரிய ஆலோச னைகளை ஜெயலலிதாவுக்கு வழங்கி உறுதுணையாய் நின் றவர் சசிகலா.

அண்ணா, எம்ஜிஆர், ஜெய லலிதா ஆகியோரின் வழியில் சாதி, மத வேறுபாடுகளை கடந்து தொண்டர்களை அரவணைத்து பாதுகாத்து வழிநடத்தும் ஆற்றல் நிறைந்தவர் சசிகலா மட்டுமே. இவரே ஜெயலலிதாவின் அரசியல் வாரிசு. என்னைப் போன்ற தொண்டர்களின் ஏகோபித்த வேண்டுகோளை ஏற்று சசிகலா கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT