தமிழகம்

2,331 உதவி பேராசிரியர் நியமனத்துக்கான அறிவிப்பாணை ரத்து

செய்திப்பிரிவு

சென்னை: அரசு கலை, அறிவியல், கல்வியியல் கல்லூரிகளில் உதவி பேராசிரியர்களுக்கான 2,331 காலி பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் (டிஆர்பி) மூலம் 2019-ம் ஆண்டு அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது.

அதற்கு பதிலாக தற்போது 4 ஆயிரம் உதவி பேராசிரியர்களின் காலி பணியிடங்களுக்கான புதிய அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட உயர்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, 2,331 உதவி பேராசிரியர் காலி பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியத்தால் ஏற்கெனவே வெளியிடப்பட்ட அறிவிப்பு ரத்து செய்யப்படுவதாக ஆசிரியர் தேர்வு வாரியம் நேற்று அறிவித்துள்ளது.

SCROLL FOR NEXT