தமிழகம்

கருணாநிதி இன்று வீடு திரும்புகிறார்

செய்திப்பிரிவு

கடந்த ஒரு வாரமாக காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் திமுக தலைவர் கருணாநிதி இன்று வீடு திரும்பு கிறார். கருணாநிதியின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதால் வெள்ளிக்கிழமை (இன்று) வீடு திரும்புவார் என திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

நீர்ச்சத்து, ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக திமுக தலை வர் கருணாநிதி கடந்த 1-ம் தேதி சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஒரு வாரம் சிகிச்சை பெற்ற நிலையில் குணமடைந்ததால் கடந்த 7-ம் தேதி வீடு திரும்பினார்.

இந்நிலையில், கடந்த 15-ம் தேதி இரவு அவருக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்படவே உடனடியாக காவேரி மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கப்பட்டார். 16-ம் தேதி காவேரி மருத்துவமனை வெளியிட்ட செய்திக் குறிப்பில், தொண்டை, நுரையீரல் தொற் றால் கருணாநிதிக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. எனவே, மூச்சு விடுவதை எளிதாக்கும் டிரக்யாஸ்டமி சிகிச்சை அளிக் கப்பட்டு வருவதாக கூறப் பட்டிருந்தது.

காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, கடந்த 17-ம் தேதி கருணாநிதியை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். அதிமுக சார்பில் மக்களவை துணைத் தலைவர் மு.தம்பிதுரை, தமிழக மீன்வளத் துறை அமைச்சர் டி.ஜெயக்குமார், மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம், பாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்ட தலைவர்கள் மருத்துவமனைக்குச் சென்று கருணாநிதியின் உடல்நலம் விசாரித்தனர்.

நல்ல முன்னேற்றம்

கருணாநிதியின் உடல்நிலை யில் நல்ல முன்னேற்றம் ஏற்பட் டுள்ளதால் அவர் வெள்ளிக்கிழமை வீடு திரும்புவார் என மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழக காங்கிரஸ் தலைவர் சு.திருநாவுக்கரசர், புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி உள்ளிட்டோர் நேற்று காவேரி மருத்துவமனைக்குச் சென்று கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரித்தனர்.

SCROLL FOR NEXT