சென்னை: தமிழகத்தில் உள்ள 25 பள்ளிகளை தேர்வு செய்து பசுமை பள்ளிகள் திட்டத்தை செயல்படுத்த தமிழக சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றத்துறை முடிவு செய்துள்ளது.
தமிழக சட்டப்பேரவையில் நடந்த சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது, பசுமைப் பள்ளிக்கூடம் திட்டம் செயல்படுத்தப்படும் என்று சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத் துறை அமைச்சர் மெய்யநாதன் அறிவித்தார். இதன்படி ஒரு பள்ளிக்கு தலா ரூ.20 லட்சம் வீதம் 25 பள்ளிகளுக்கு ரூ.5 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கான பணிகளை தமிழக அரசு தொடங்கி உள்ளது.மேலும் இந்த பள்ளிகளில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படவுள்ளது. இதன் விவரம்:
இதை கண்காணிக்க மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர், முதன்மை கல்வி அலுவலர், பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர் உள்ளிட்ட 4 பேர் கொண்ட குழு அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.