சென்னை காசிமேடு அண்ணா நகரை சேர்ந்தவர் புலவேந்திரன். நேற்று முன்தினம் இரவில் புல வேந்திரன் உட்பட 3 பேர் பைபர் படகில் கடலுக்குள் மீன் பிடிக்க சென்றனர். அப்போது எதிர்பாராத விதமாக புலவேந்திரன் படகில் இருந்து கடலுக்குள் தவறி விழுந்து விட்டார். தண்ணீரில் தத்தளித்த அவரை உடன் சென்ற வர்கள் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். பின்னர் சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். புலவேந்திரனை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
எண்ணூர் தாளங்குப்பத்தை சேர்ந்தவர் குப்புசாமி. இவரும் 3 பேருடன் நேற்று முன்தினம் இரவில் கடலுக்குள் மீன் பிடிக்க சென்றார். குப்புசாமி நிலை தடுமாறி கடலுக்குள் விழுந்தார். உடன் சென்றவர்கள் அவரை மீட்டனர். அவரையும் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்த னர். குப்புசாமியை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து துறைமுக போலீஸார் விசாரிக்கின்றனர்.