ஆட்சியர் மேகநாதரெட்டி 
தமிழகம்

விருதுநகர் மாவட்டத்தில் அக். 29, 30-ல் டாஸ்மாக் கடைகளை அடைக்க உத்தரவு

செய்திப்பிரிவு

விருதுநகர்: விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெ.மேகநாதரெட்டி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து மதுபானக் கூடங்களும், தேவர் குருபூஜை தினத்தை முன்னிட்டு அக். 29 மாலை 6 மணி முதல் 30-ம் தேதி முழுவதும் தற்காலிகமாக மூடுவதற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த உத்தரவை மீறிச் செயல்படும் டாஸ்மாக் நிறுவனப் பணியாளர்கள், மதுபானக் கூட உரிமையாளர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

SCROLL FOR NEXT