சென்னை: வடகிழக்கு பருவமழையை எதிர் கொள்வது தொடர்பாக 15 துறைகளுக்கு சென்னை மாநகராட்சி முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.
வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு, அனைத்து துறை அதிகாரிகளுடான ஆலோசனை கூட்டம், சென்னை மாநகராட்சி மேயர் பிரியா தலைமையில் இன்று (அக்.14) நடந்தது. இந்த கூட்டத்தில் மாநகராட்சி அதிகாரிகள் பேசுகையில், "சென்னை மாநகராட்சி பராமரிக்கும் 1,356 கி.மீ., மழைநீர் வடிகால்களை துார்வார 71.28 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. ஜூன் 3ம் தேதியில் இருந்து துாவாரும் பணிகள் துவங்கப்பட்டு 1,193 கி.மீ., என, 88 சதவீத பணிகள் முடிந்துள்ளன. மீதமுள்ள பணிகள் வரும் 20ம் தேதிக்குள் முடிக்கப்படும். அதேபோல், சேதமடைந்த நிலையில் இருந்த மேஹொல் மூடிக்கு பதிலாக புதிய மூடிகள் போடப்பட்டுள்ளன.
கொசஸ்தலை, கூவம், அடையாறு மற்றும் 30 நீர்வழித்தடங்களில் நவீன இயந்திரங்கள் வாயிலாக வண்டல், ஆகாய தாமரைகள் அகற்றப்பட்டுள்ளன. மேலும், சுரங்கப்பாதை துார்வாரப்பட்டதுடன், தண்ணீர் தேங்கக்கூடிய 113 இடங்களில் மோட்டார் பம்புகள் அமைக்கப்பட்டுள்ளன. 15 மண்டலங்களிலும் 503 மோட்டார் பம்புகள் அமைக்கப்படும்.
மேலும், 20 ஆயிரத்து 288 மரங்களின் கிளைகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அகற்றப்பட்டுள்ளன. தண்ணீர் தேங்க வாய்ப்பு இருப்பதாக 109 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. அங்கு, மீன்வளத்துறையுடன் இணைந்து படகுகள் தயார் நிலையில் வைக்கப்படும். மாநகராட்சிப் பள்ளிகள், சமுதாய கூடங்கள், திருமண மண்டபங்கள் என 169 நிவாரண முகாம்கள் தயார் நிலையில் உள்ளன. 44 நடமாடும் மருத்துவ முகாம்கள் தயார் நிலையில் உள்ளன.
பொதுமக்களின் புகார்களைப் பெற, மாநகராட்சியின் 1913 என்ற கட்டுப்பாட்டு அறை 24 மணி நேரமும் செயல்படும். ஒரே நேரத்தில் 1,500 பேருக்கு உணவு தயாரிக்கும் வகையில், பொது சமயலறை தயார் நிலையில் உள்ளது. மின் கம்பங்கள், பாக்ஸ், ஒயர்கள் ஆகியவை சரிபார்க்கப்பட்டு, பழுதுகள் சரி செய்யப்பட்டுள்ளன. கடந்த 2015ல் வெள்ளம் பாதித்த 52 இடங்களில் தேசிய மீட்புக் குழுவினர் தயார் நிலையில் இருப்பார்கள்" இவ்வாறு பேசினார்கள்.
15 துறைகளுக்கான அறிவுரை