குமரி ஆனந்தனுக்கு வீடு வழங்கிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 
தமிழகம்

குமரி அனந்தனுக்கு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வீடு ஒதுக்கீடு 

செய்திப்பிரிவு

சென்னை: குமரி ஆனந்தனுக்கு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வீடு ஒதுக்கீடு செய்ததற்கான ஆணையை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் நான்கு முறை சட்டமன்ற உறுப்பினராகவும், ஒரு முறை நாடாளுமன்ற உறுப்பினராகவும், தமிழ்நாடு பனைத் தொழிலாளர் நல வாரியத் தலைவராகவும் பணியாற்றியுள்ளார். இவர் தான் வாழ்வதற்கு வசதியாக, தமிழ்நாடு அரசின் சார்பில் வீடு வழங்கிட வேண்டுமென தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தார். இந்த கோரிக்கையை ஏற்று அண்ணா நகர் கோட்டத்தில் அமைந்துள்ள, தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் உயர் வருவாய்க் குடியிருப்பில், வீடு வழங்கி, அதற்கான ஆணையினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று சென்னை தலைமை செயலகத்தில் குமரி அனந்தனிடம் வழங்கினார்.

SCROLL FOR NEXT