தமிழகம்

நிபந்தனைகளுடன் 12 மீனவர்களை விடுவித்தது இலங்கை

செய்திப்பிரிவு

தமிழகம், புதுச்சேரி மீனவர்கள் 12 பேரை இலங்கையில் உள்ள திருகோணமலை நீதிமன்றம் நிபந்தனைகளுடன் விடுதலை செய்தது.

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து செப்.5-ம் தேதி கீழகாசாக்குடிமேட்டைச் சேர்ந்த உலகநாதனின் விசைப்படகில் நாகை, காரைக்கால், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 12 மீனவர்கள் கடலுக்குச் சென்றனர்.

முல்லைத்தீவு அருகே சர்வதேச கடலில் ரோந்த வந்த இலங்கை கடற்படையினர் 12 மீனவர்களையும் கைது செய்து, எல்லை தாண்டி மீன்பிடித்தல், தடை செய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து திருகோணமலை சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு திருகோணமலை நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தபோது, நீதிபதி முகம்மது பயஸ் மீனவர்கள் 12 பேரும் மீண்டும் இலங்கை எல்லைக்குள் மீன்பிடித்தால் 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்ற நிபந்தனையின்பேரில் மீனவர்களை விடுதலை செய்து உத்தரவிட்டார். இதையடுத்து மீனவர்கள் 12 பேரும் கொழும்புவில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

SCROLL FOR NEXT