தமிழகம்

சிலை திருட்டு வழக்கில் தீனதயாளின் 4 கூட்டாளிகள் கைது

செய்திப்பிரிவு

தமிழகத்தின் பழமையான கோயில் களில் உள்ள சுவாமி சிலைகளை திருடி வெளிநாடுகளுக்கு கடத்தி வந்த தீனதயாள் உள்ளிட்டோர், கடந்த சில மாதங்களுக்கு முன் சென்னையில் கைது செய்யப் பட்டனர். அப்போது, சென்னையில் உள்ள தீனதயாளின் வீடு, குடோன், அலுவலகத்தில் இருந்து ஏராளமான சுவாமி சிலைகள் கைப்பற்றப்பட்டன.

போலீஸாரிடம் தீனதயாள் அளித்த வாக்குமூலத்தில், தமிழகம் முழுவதுமிருந்து தனக்கு சிலைகளை திருடித் தருவோர் குறித்து குறிப்பிட்டிருந்தார். அதில், காரைக்குடி செக்காலை சண்முகராஜா தெருவைச் சேர்ந்த கனகராஜ் (64), அழகப்பாபுரத்தைச் சேர்ந்த தினகரன் (69), சாமிநாதன் செட்டியார் தெருவைச் சேர்ந்த பெரியநாயகம் (47), எஸ்ஆர்எம் தெருவைச் சேர்ந்த செல்வராஜ் (60) ஆகிய 4 பேரும் தனக்கு சிலைகளை திருடி தந்ததாக அவர் குறிப்பிட்டிருந்தார்.

இதையடுத்து, தலைமறைவாக இருந்த 4 பேரையும் கைது செய்ய சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் காரைக் குடியில் கடந்த ஒருவாரமாக முகாமிட்டு தேடி வந்தனர்.

இதனிடையே, 4 பேரும் சிவ கங்கை தாலுகாவைச் சேர்ந்த விஏஒக்கள் கோபிகிருஷ்ணா, வெள்ளைச்சாமி, பெரோஸ்கான், கௌரி ஆகியோரிடம் நேற்று சரணடைந்தனர்.

இதையடுத்து, சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் நேற்று இரவு சிவகங்கை நகர் காவல் நிலையத்தில் வைத்து 4 பேரையும் கைது செய்து சென்னை அழைத்துச் சென்றனர்.

SCROLL FOR NEXT