சென்னையில் டேங்கர் லாரிகளை பகலில் 35 கி.மீட்டர் வேகத்தில் மட்டுமே இயக்க வேண்டும். மீறினால், நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் ஆணையர் எஸ்.ஜார்ஜ் எச்சரித்துள்ளார்.
கிண்டியில் தண்ணீர் லாரி மோதிய விபத்தில் 3 கல்லூரி மாணவிகள் சில தினங்களுக்கு முன் இறந்தனர். இந்த சம்பவம் சென்னையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. இதைத் தொடர்ந்து இதுபோன்ற விபத்துகள் மீண்டும் நடந்து விடக்கூடாது என்பதற்காக தண்ணீர் ஏற்றிச் செல்லும் லாரி, கழிவுநீர் அகற்றும் லாரி மற்றும் எண்ணெய் பொருட்களை ஏற்றிச் செல்லும் டேங்கர் லாரிகளின் கூட்டு அமைப்பு மற்றும் லாரி உரிமையாளர்களுக்கு நேற்று காவல் ஆணையர் அலுவலகத்தில் ஆலோசனை வழங்கப்பட்டது. காவல் ஆணையர் எஸ்.ஜார்ஜ் உத்தரவுப்படி போக்குவரத்து கூடுதல் ஆணையர் அபய் குமார் சிங் தலைமையில் கூட்டம் நடந்தது.
கூட்டத்தில் டேங்கர் லாரிகளால் ஏற்படும் விபத்தை தடுக்கவும், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அச்சமின்றி பாதுகாப்பாக செல்லவும், போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையர் ஆலோசனை வழங்கினார். அதன் விவரம்:
*
டேங்கர் லாரி வாகனங்கள் கண்டிப் பாக தகுதிச் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
*
டேங்கர் லாரிகள், நல்ல முறையில் பராமரிக்கப்படுகிறதா? என்பதை தினமும் ஆய்வு செய்வது அவசியம்.
*
டேங்கர் லாரி ஓட்டுநர்கள் தினமும் வாகனத்தை இயக்குவதற்கு முன்பு வாகனத்தின் தன்மையை சரி பார்க்க வேண்டும்.
*
ஓட்டுநருடைய உரிமம் புதுப்பிக் கப்பட்டுள்ளதா? என்றும் அவருக்கு குற்றப்பின்னணி உள்ளதா? என்பதை யும் டேங்கர் லாரி உரிமையாளர்கள் பார்த்து உறுதி செய்ய வேண்டும்.
*
எக்காரணத்தை கொண்டும் டேங்கர் லாரி கிளீனரை வாகனத்தை ஓட்ட அனுமதிக்கக் கூடாது.
*
தினசரி அனுமதிக்கப்பட்ட முறைகளைவிட அதிக முறைகள் வாகனத்தை இயக்கக் கூடாது.
*
ஓவ்வொரு டேங்கர் லாரி ஓட்டு நரும் நல்ல உடல் தகுதியுடன் உள்ளார்களா? என்பதை அவ்வப்போது கண்காணிக்க வேண்டும்.
*
மது அருந்திவிட்டு வாகனங்களை ஓட்டக்கூடாது என்பதை ஓட்டுநர் களுக்கு தெளிவுப்படுத்த வேண்டும். இது சம்பந்தமாக ஓட்டுநரின் நடவடிக் கைகளை வாகன உரிமையாளர் கண்காணிக்க வேண்டும்.
*
டேங்கர் லாரிகளை நிர்ணயிக் கப்பட்ட வேகத்தில் மட்டும்தான் இயக்க வேண்டும். காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை 35 கி.மீ வேகத்துக்கு மிகாமல் இருக்க வேண் டும். இரவு 10 மணி முதல் காலை 7 மணி வரை 40 கி.மீ வேகத்துக்கு அதிக மாக வாகனத்தை இயக்கக் கூடாது.
*
பள்ளி, கல்லூரி மற்றும் மக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ள பகுதிகளில் மிகுந்த கவனத்துடன் மிதமான வேகத்தில்தான் வாகனத்தை இயக்க வேண்டும்.
*
அதிக ஓலியெழுப்பியோ அல் லது இருசக்கர வாகன ஓட்டுநர்கள் மற்றும் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையிலோ வாகனத்தை இயக்கக் கூடாது.
*
அனைத்து டேங்கர் லாரி வாகனங் களிலும் “வேக கட்டுப்பாட்டுக் கருவி” மற்றும் பக்கவாட்டு தடுப்பு தகடு கண் டிப்பாக பொருத்தியிருக்க வேண்டும்.
*
வாகன உரிமையாளர்கள் மற்றும் கூட்டமைப்பு நிர்வாகிகள், லாரி ஓட்டுநர்களுக்கு பாதுகாப்பான முறையில் வாகனத்தை இயக்க பயிற்சி வகுப்புகள் நடத்தி ஓட்டுநர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
*
லாரிகள் சென்னை மாநக ரில் ஏற்கெனவே குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே இயக்க அனுமதிக்கப்பட் டுள்ளது. அதை கண்டிப்பாக கடைப் பிடிக்க வேண்டும்.
இந்த ஆலோசனைகளை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் ஆணையர் எஸ்.ஜார்ஜ் எச்சரித்துள்ளார்.