நாகர்கோவில் நீதிமன்றத்தில் போலீஸ் எஸ்.ஐ.,க்கும், வழக் கறிஞருக்கும் இடையில் ஏற்பட்ட மோதலில், எஸ்.ஐ. தாக்கப்பட்டு, 4 மணி நேரம் சிறைப்பிடிக்கப்பட்டார். நீதிமன்ற வளாகத்தில் போலீஸார் குவிக்கப்பட்டு, பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டம், சுசீந்திரம் போலீஸ் நிலையத்தில் எஸ்.ஐ.யாக பணிபுரிபவர் சுஜித் ஆனந்த். இவருக்கும், நாகர் கோவில், மணிக்கட்டி பொட்டலைச் சேர்ந்த வழக்கறிஞர் அழகேசனுக் கும் தனிப்பட்ட விரோதம் இருந்தது. எஸ்.ஐ., சுஜித் ஆனந்த் மீது, நாகர்கோவில் ஜே.எம்.2 நீதிமன்றத்தில் அழகேசன் வழக்கு தொடர்ந்திருந்தார்.
வெள்ளிக்கிழமை காலை வழக்கு விசாரணைக்கு ஆஜராக எஸ்.ஐ. சுஜித் ஆனந்த் நீதிமன்றத் துக்கு வந்தார். அவருக்கும் அழகேசனுக்கும் இடையே திடீர் மோதல் ஏற்பட்டது. அழகேசனுடன் இருந்த சிலர், சுஜித் ஆனந்தை தாக்கி, அவரது துப்பாக்கியைப் பறித்து அவரை சிறைப்பிடித்தனர்.
அங்கு வந்த வழக்கறிஞர்கள், மோதலில் ஈடுபட்டவர்களையும், சுஜித் ஆனந்தையும் மாவட்ட நீதிபதி ராஜசேகரன் அறைக்கு அழைத்துச் சென்றனர். தன்னை துப்பாக்கியைக் காட்டி சுஜித் ஆனந்த் மிரட்டியதாக, நீதிபதி ராஜசேகரனிடம் அழகேசன் புகார் மனு கொடுத்தார். இம்மனு விசா ரணைக்காக கோட்டாறு போலீஸா ருக்கு பரிந்துரைக்கப்பட்டது. இச்சம்பவத்தை கண்டித்து நாகர்கோவில் வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.
நீதிமன்ற வளாகத்தில் போலீஸார் குவிக்கப்பட்டனர். எஸ்.ஐ.,யை விடுவிக்க பேச்சுவார்த்தை நடைபெற்றது. 4 மணி நேரத்துக்குப் பின், மதியம் 2.15 மணிக்கு எஸ்.ஜ.சுஜித் ஆனந்தை போலீஸார் மீட்டுச் சென்றனர். அவர், ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்துள்ளார்.
இரு தரப்பினரும் கோட்டாறு போலீஸில் புகார் செய்தனர். எனினும் வழக்கு பதிவாகவில்லை.