தமிழகம்

வாடகைத் தாய் மூலம் குழந்தை பெறும் அரசுத் துறை பெண் ஊழியர்களுக்கு 270 நாள் பராமரிப்பு விடுப்பு

செய்திப்பிரிவு

சென்னை: வாடகைத் தாய் மூலம் குழந்தை பெறும் பெண் அரசு ஊழியர்களுக்கு 270 நாள் பராமரிப்பு விடுப்பு வழங்கப்படும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

வாடகைத்தாய் மூலம் குழந்தை பெறும் பெண் அரசு ஊழியர்களுக்கு 270 நாள் குழந்தை பராமரிப்பு விடுப்பு வழங்கப்படும் என்று கடந்த சட்டப்பேரவை கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது. இதை செயல்படுத்தும் விதமாக தமிழக அரசு சார்பில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி, சட்ட ரீதியான ஒப்பந்தம் மற்றும் மருத்துவரின் சான்றிதழ் அடிப்படையாக கொண்டு இந்த விடுப்பு வழங்கப்படும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. குழந்தை பிறந்த நாளில் இருந்து 270 நாட்கள் இந்த விடுப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT