வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க வலியுறுத்தி தாம்பரம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் திமுகவினர் தர்ணா போராட்டம் நடத்தினர்.
குரோம்பேட்டை நியூகாலனி பகுதியைச் சேர்ந்தவர் காமராஜ். திமுக முன்னாள் மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகனின் மைத்துனர். இவர் தன்னுடைய பெயரை பல்லா வரம் நகராட்சியில் வாக்காளர் பட்டியலில் சேர்க்க விண்ணப்பித்து இருந்தார்.
அவருடைய பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்காமல் தடுக்க சதி நடப்பதாகவும் அதற்கு அதிகாரிகள் துணை போவதாகவும் வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்க்கும் வரையில் போராட்டம் நடத்துவோம் என்று கூறியும் பல்லாவரம் நகராட்சி அலுவலகத் தில் திமுகவினர் திரண்டனர்.
அப்போது, பல்லாவரம் நகராட்சி ஆணையாளரும் நகராட்சி தேர்தல் நடத்தும் அலுவலருமான சிவக் குமார் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பது குறித்த அறிக்கை, தாம்பரம் கோட்டாட்சியர் அலுவல கத்துக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து திமுகவினர், காமராஜ் தலைமையில் தாம்பரம் கோட்டாட்சியர் அலுவலகத்துக்கு வந்தனர். அங்கு கோட்டாட்சியர் ராஜேந்திரன் இல்லாததால், அவர் வரும் வரை இந்த இடத்தை விட்டு செல்ல மாட்டோம் என கூறி தரையில் அமர்ந்து திமுகவினர் தர்ணா போராட்டம் நடத்தினர்.
இதனால் ஏராளமான போலீஸார் அங்கு குவிக்கப்பட்டனர். தாம்பரம் தொகுதி திமுக எம்எல்ஏ எஸ்.ஆர்.ராஜா அங்கு வந்து நிலவரத்தை கேட்டறிந்தார்.