தமிழகம்

போக்குவரத்து ஊழியர் வாரிசுகள் தொழிற்கல்வி சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்

செய்திப்பிரிவு

சென்னை: போக்குவரத்துக் கழக ஊழியர்களின் வாரிசுகள் தொழிற்கல்வி கூடங்களில் இட ஒதுக்கீட்டின் கீழ் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் என மாநகர போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக அனுப்பப்பட்ட சுற்றறிக்கை: சென்னை குரோம்பேட்டை, பர்கூர் மற்றும் திருநெல்வேலி ஆகிய இடங்களில் சாலைபோக்குவரத்து நிறுவனத்தின்கீழ் இயங்கி வரும் தொழிற்கல்வி கூடங்களில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகதொழிலாளர்களின் பிள்ளைகளுக்கான இட ஒதுக்கீட்டில்2022-23 நடப்பு கல்வியாண்டுக்கான முதலாம் ஆண்டு பட்டயப் படிப்பு மற்றும் இரண்டாமாண்டு நேரடி பட்டயப் படிப்பில் சேருவதற்கான விண்ணப்பப் படிவங்களை, www.mtcbus.tn.gov.in -> others என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்ய வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை தேர்வு முடிவுகள் வெளியான ஒரு வாரத்துக்குள் தலைமையக தொழிலாளர் நலப் பிரிவில் சமர்ப்பிக்க வேண்டும்.

SCROLL FOR NEXT