பொறியியல் படிப்புக்கான ஆன்லைன் பதிவு ஏப்ரல் 15-ம் தேதி தொடங்கியது. நேற்று வரையில் ஒரு லட்சத்து 48 ஆயிரத்து 94 பேர் ஆன்லைனில் பதிவு செய்திருப்ப தாகவும், அவர்களில் 83 ஆயிரத்து 554 பேர் ஆன்லைனில் விண்ணப்பக் கட்டணத்தை செலுத்தியிருப்பதாக வும் அண்ணா பல்கலைக்கழகப் பதிவாளர் எஸ்.கணேசன், தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை செயலாளர் பேராசிரியை இந்துமதி ஆகியோர் தெரிவித்தனர்.