தமிழகம்

பார்வையற்றோர் பிரிவில் கார் ஓட்டுநர் மகன் முதலிடம்

செய்திப்பிரிவு

பார்வையற்றோர் பள்ளிகள் அளவில் பாளையங்கோட்டை யிலுள்ள பார்வையற்றோர் மேல் நிலைப் பள்ளி மாநில அளவில் முதல் மற்றும் 2-ம் இடங்களை பிடித்து சாதனை படைத்திருக்கிறது.

இப்பள்ளி மாணவர் கோ.கிருஷ்ணகுமார் 489 மதிப் பெண் பெற்று மாநில அளவில் முதலிடம் பெற்றுள்ளார். தூத்துக் குடி மாவட்டம், செய்துங்கநல்லூ ரைச் சேர்ந்த கார் ஓட்டுநர் கோவர்த்தனன் - சந்திரகனி தம்பதியரின் மகனான இவர், பிறவியிலேயே கண் பார்வை இழந்தவர். 1-ம் வகுப்பு முதல் இதே பள்ளியில் படித்துவந்தார்.

கிருஷ்ணகுமார் கூறும்போது, ‘பிரெய்லி முறையில் பாடங்களைப் படித்து ஆசிரியர் உதவியுடன் தேர்வு எழுதினேன். ஆங்கில இலக்கியம் கற்று கல்லூரியில் பேராசிரியராக வேண்டும் என்பதே எனது லட்சியம்’ என்றார்.

2-ம் இடம்

இதே பள்ளியில் படித்த பார்வையற்ற மாணவி மு.ராணி 470 மதிப்பெண் பெற்று மாநில அளவில் 2-ம் இடம் பெற்றுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம், ஜம்புலிங்கபுரம் காலனி தெரு வைச் சேர்ந்த விவசாய கூலித் தொழிலாளி முருகேசனின் மகளான ராணி, ‘ஆங்கில இலக் கியம் கற்று கல்லூரியில் பேராசி ரியராக வேண்டும் என்பதே தன் இலக்கு’ என்றார்.

SCROLL FOR NEXT