தமிழகம்

பாஜகவுக்கு ஆதரவு பிரச்சாரம் செய்ததாக காவலர் சஸ்பெண்ட்

செய்திப்பிரிவு

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் சின்னாளபட்டி அருகே அம்பாத்துரை காவல் நிலையத்தில் தலைமை காவலராக இருந்தவர் சுரேஷ்(48). இவர் முகநூல் உள்ளிட்ட வலைதளங்களில் பாஜகவின் கொள்கை, தகவல்களை பகிர்ந்து அக்கட்சிக்கு ஆதரவாகச் செயல்பட்டு வந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

திண்டுக்கல் மாவட்ட சைபர் கிரைம் போலீஸார் இவர் மீதான குற்றச்சாட்டை ஆய்வு செய்தனர். இதில் அவர் மீதான புகார் உறுதிப்படுத்தப்பட்டது.

இதையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாசன், தலைமைக் காவலர் சுரேஷை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

SCROLL FOR NEXT