தமிழகம்

நேதாஜியின் இந்திய தேசிய ராணுவத்தில் பணியாற்றிய: சுதந்திர போராட்ட வீரர் சி.எம்.பாண்டியராஜ் மறைவு

செய்திப்பிரிவு

ராமநாதபுரம்: நேதாஜியின் இந்திய தேசிய ராணுவத்தில் பணியாற்றிய சுதந்திர போராட்ட வீரர் சி.எம்.பாண்டியராஜ் காலமானார்.

ராமநாதபுரம் பட்டிணம் காத்தான் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் வசித்து வந்தவர் சி.எம்.பாண்டியராஜ் (97). இவர் மலேசியா நாட்டில் தனது பெற்றோருடன் வசித்தபோது, 17 வயதில் 1943-ம் ஆண்டில் நேதாஜியின் இந்திய தேசிய ராணுவத்தில் (ஐஎன்ஏ) சேர்ந்து பணியாற்றினார். 1945-ல் ஜப்பான் மீது அணுகுண்டு வீசப்பட்டதால் ஐஎன்ஏ படைக்கு போதிய ஆயுத உதவி கிடைக்கவில்லை. அப்போது பிரிட்டிஷ் படைகள் மலேசியாவை கைப்பற்றி, ஐஎன்ஏ வீரர்களை கைது செய்தது. இதில் சி.எம்.பாண்டியராஜ் கைது செய்யப்பட்டு 6 மாதங்கள் மலேசி யாவின் அலோஸ்கா சிறையில் அடைக்கப்பட்டார்.

பின்னர் ராமநாதபுரம் திரும் பினார். இவர் அகில இந்திய சுதந்திர போராட்ட வீரர்கள் அமைப்பின் ராமநாதபுரம் மாவட்டப் பொதுச்செயலாளராக செயல்பட்டு வந்தார். இவருக்கு மனைவி, 3 மகள்கள், 2 மகன்கள் உள்ளனர்.

வயோதிகம் காரணமாக ராமநாதபுரத்தில் மருத்துவச் சிகிச்சை பெற்று வந்த சி.எம்.பாண்டியராஜ் நேற்று முன்தினம் இரவு காலமானார். ராமநாதபுரம் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு அமைச்சர் ராஜகண்ணப்பன், மாவட்ட ஆட்சியர் சங்கர் லால் குமாவத் மற்றும் ஏராளமான மக்கள் அஞ்சலி செலுத்தினர்.

நேற்று மாலை ராமநாதபுரம் நகராட்சி அல்லி கண்மாய் மின்மயானத்தில் இறுதிச் சடங்குகள் நடைபெற்றன.

SCROLL FOR NEXT