மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கை:
தமிழ்நாடு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழுக் கூட்டம் செயற்குழு உறுப்பினர் கே.தங்கவேல் தலைமையில் சென்னையில் கடந்த 26-ம் தேதி நடந்தது.
இக்கூட்டத்தில், “மேற்கு வங்கத்தில் மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ள திரிணமூல் காங்கிரஸ் கட்சி இதற்கு முன் எப்போதும் இல்லாத அளவில் இடதுசாரி கட்சியினர் மீது வன்முறை வெறியாட்டத்தை கட்டவிழ்த்து விட்டுள்ளது. மாநிலம் முழுவதும் 600-க்கும் மேற்பட்ட மார்க்சிஸ்ட் கட்சி மற்றும் இடதுசாரி கட்சிகளின் அலுவலகங்கள், வெகுஜன அமைப்புகளின் அலுவலகங்கள் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் குண்டர்களால் அடித்து நொறுக்கப்பட்டுள்ளன.
இத்தகைய கொடூர வன்முறை வெறியாட்டங்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது. இதனைக் கண்டித்து சென்னை, மதுரை, கோவை, நெல்லை, நாகை ஆகிய மையங்களில் வரும் ஜூன் 4-ம் தேதி ஆர்பாட்டம் நடக்க வுள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.