கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் சமூக பாதுகாப்புதிட்டத்தின் தனித்துணை ஆட்சியர் ராஜாமணி(50). இவர் நேற்று சங்கராபுரம் அருகே உள்ள கோயிலுக்கு தனது உறவினர்களான பழனியம்மாள், விக்ரம், சிந்து ஆகியோருடன் தனக்கு ஒதுக்கிய அரசு வாகனத்தில் ஓட்டுநர் நசீம் பாரூக்குடன் (36) சென்றுள்ளார்.
சங்கராபுரம் வட்டாட்சியர் அலுவலகம் அருகே சென்று கொண்டிருந்த நிலையில், திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம், சாலையோரம் எதிர்புறத்தில் நின்றிருந்த 3 பைக்குளில் மோதி,தாறுமாறாக சென்று மின் கம்பத்தில் மோதி நின்றுள்ளது. இதில் மின் கம்பமும் சாய்ந்து வாகனத்தின் மீது விழுந்ததில் வாகனத்தில் இருந்த சார் ஆட்சியர் ராஜாமணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மேலும் வாகனத்தை ஒட்டிய ஓட்டுநர் நசீம் பாரூக், பழனியம்மாள், விக்னேஷ். கிரிஜா ஆகிய நால்வரும் பலத்தக் காயமடைந்தனர். மின்கம்பம் அருகில் நின்றிருந்த கோபிகா (11) மற்றும் அண்ணன்தங்கையான விக்ரம் (21), சிந்து (19) ஆகியோரும் பலத்த காயமடந்தனர். விபத்து நிகழ்ந்த பகுதியில் நின்றிருந்தவர்கள், காயமடைந்தவர்களை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் சிறுமி கோபிகா மருத்துவமனைக்கு அழைத்து சென்ற நிலையில் உயிரிழந்தார்.
இந்த விபத்து குறித்து கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வகுமார் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.