விழுப்புரம்: விழுப்புரம் அருகே முண்டியம் பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரகாஷ் (40). இவருடைய நண்பர் ஒருவர், மருத்துவ உபகரணங்களை விநியோகம் செய்யும் நிறுவனம் நடத்தி வருகிறார். அவரின் வாட்ஸ்-அப் குழுவில் பிரகாஷ் உள்ளார். இந்நிலையில் பிரகாஷை, செல்போனில் தொடர்பு கொண்டு பேசிய நபர் ஒருவர்,
முகக்கவசம் மற்றும் மருத்துவ உபகரணங்களை குறைந்தவிலைக்கு தருவதாக தெரிவித் துள்ளார்.
இதை நம்பிய பிரகாஷ், அந்த நபர் கூறிய வங்கி கணக்கிற்கு ரூ.14 லட்சத்தை 2 தவணைகளாக அனுப்பி வைத்துள்ளார். ஆனால்பணத்தை பெற்ற அந்த மர்ம நபர்,பிரகாஷுக்கு முகக்கவசமோ மற்றும் மருத்துவ உபகரணங்களையோ அனுப்பி வைக்காமல் பணத்தை மோசடி செய்தது தெரியவந்தது.
இதுகுறித்து பிரகாஷ், விழுப்புரம் மாவட்ட சைபர் கிரைம் போலீஸில் புகார் செய்தார். அதன் பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து, மோசடி செய்த நபரை தேடி வருகின்றனர்.