கோப்புப் படம் 
தமிழகம்

தென் தமிழகத்தில் இன்று கனமழை பெய்யும்: சென்னை வானிலை ஆய்வு மையம்

செய்திப்பிரிவு

சென்னை: தென் தமிழகத்தில் இன்று கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், “ கேரள கடலோரப் பகுதிகளின்‌ மேல்‌ நிலவும்‌ வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ இன்று ஒரு சில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக் கூடும்‌.

தென்‌ தமிழகம்‌, நீலகரி, கோயம்புத்தூர்‌, திருப்பூர்‌ மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமுதல்‌ மிக கன மழையும்‌ பெய்யும். ஈரோடு, சேலம்‌, நாமக்கல்‌ மற்றும்‌ கரூர்‌ மாவட்டங்களில்‌ ஒரிரு இடங்களில்‌ கன மழையும்‌ பெய்ய வாய்ப்புள்ளது.

நாளை (ஏப்.14) தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒரு சில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக் கூடும்‌. தென்தமிழகம்‌, நீலகிரி, கோயம்புத்தூர்‌ மற்றும்‌ திருப்பூர்‌ மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.

நாளை மறுநாள் தென் தமிழகம்‌, நீலகிரி, கோயம்புத்தூர்‌ மற்றும்‌ இருப்பூர்‌ மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக் கூடும்‌.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேோரத்தகுற்கு வானம்‌ ஓரளவு மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. நகரின்‌ ஒரு சில இடங்களில்‌ லேசான மழை பெய்யக் கூடும்‌. கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் தாரபுரம் பகுதியில் அதிகபட்சமாக15 செமீ மழை பதிவாகி உள்ளது.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT