தமிழகம்

கடல்சார் ஆராய்ச்சிக்கான ஐஆர்என்எஸ்எஸ்-1ஜி செயற்கைக்கோள் இன்று விண்ணில் செலுத்தப்படுகிறது

செய்திப்பிரிவு

கடல்சார் ஆராய்ச்சிக்கான ஐஆர்என்எஸ்எஸ்-1ஜி செயற் கைக்கோள் ஹரிகோட்டாவில் இருந்து இன்று விண்ணில் செலுத்தப்பட உள்ளது. இதற்கான கவுன்ட் டவுன் நேற்று முன்தினம் தொடங்கியது.

கடல்சார் ஆராய்ச்சிக்காக 7 செயற்கைக்கோள்களை விண் ணில் செலுத்த இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) முடிவு செய்திருந்தது. இதன்படி ஐஆர்என்எஸ்எஸ்-1ஏ என பெயரிடப்பட்ட முதல் செயற்கைக்கோள் 2013-ம் ஆண்டு ஜூலை 1-ம் தேதி வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.

இதையடுத்து ஐஆர்என் எஸ்எஸ்-1பி, 1சி, 1டி,1இ, 1எஃப் ஆகிய 5 செயற்கைக்கோள்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டுள்ளன. இந்நிலை யில் இந்த திட்டத்தின் இறுதி செயற்கைக்கோள் (7-வது செயற் கைக்கோள்) ஐஆர்என்எஸ்எஸ்-1ஜி, இன்று விண்ணில் செலுத்தப் பட உள்ளது.

இன்று மதியம் 12.50 மணிக்கு ஆந்திர மாநிலம் ஹரிகோட்டா வில் உள்ள சதீஸ் தவான் விண்வெளி நிலையத்தில் இருந்து ஐஆர்என்எஸ்எஸ்-1ஜி செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட உள்ளது. கடல் பகுதி களின் பாதுகாப்பு, இயற்கை சீற்றம், இயற்கை பேரிடர் மேலாண்மை, திசை அறிதல் உள்ளிட்ட கடல்சார் ஆராய்ச்சி பணிகளை இந்த செயற்கைக்கோள் மேற் கொள்ளும். முழுவதும் உள்நாட்டி லேயே தயாரிக்கப்பட்டுள்ள இந்த செயற்கைக்கோளின் ஆயுட்காலம் 12 ஆண்டுகள் ஆகும்.

‘இந்த செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தினால் இந்தியா ஜி.பி.ஆர்.எஸ். தொழில்நுட்பத்தில் தன் னிறைவு பெற்றுவிடும். மேலும், அமெரிக்கா, ரஷ்யா ஆகிய நாடுகளை அடுத்து இந்த தொழில் நுட்பத்தை சொந்தமாக பயன் படுத்தும் நாடுகளின் வரிசையில் இந்தியா இடம்பெறும்’ என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

இஸ்ரோவின் அதிகாரபூர்வ இணையதளத்தில் தெரிவிக்கப் பட்டிருப்பதாவது:

ஐஆர்என்எஸ்எஸ்-1ஜி செயற்கைக் கோளை (பி.எஸ்.எல்.வி-சி 33 ராக்கெட் மூலம்) விண்ணில் செலுத்துவதற்கான கவுன்ட் டவுன் நேற்று முன்தினம் காலை 9.20 மணிக்கு தொடங்கியது.

மேலும், செயற்கைக்கோளை விண்ணில் செலுத்துவதற்கான எரிபொருள் நிரப்புதல் உள்ளிட்ட ஆயத்த பணிகள் நிறைவடைந்து விட்டன. செயற்கைக்கோள் இன்று (ஏப்-28) பகல் 12.50 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட தயார் நிலையில் உள்ளது.

இவ்வாறு இஸ்ரோ இணையதளத்தில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

SCROLL FOR NEXT