பண்ருட்டி நகராட்சி பதவியை கைப்பற்றிய திமுக நகரச் செயலாளர் ராஜேந்திரன். 
தமிழகம்

பண்ருட்டி திருப்பம்: திமுகவில் துணைத் தலைவராக அறிவிக்கப்பட்டவர் அதிமுக உதவியோடு நகர்மன்றத் தலைவரானார்

செய்திப்பிரிவு

33 வார்டுகளைக் கொண்ட பண்ருட்டி நகராட்சியில் திமுக 24, அதிமுக 7, சுயேச்சைகள் 2 இடங்களில் வெற்றி பெற்றன.

2-வது வார்டில் வெற்றிபெற்ற திமுக கவுன்சிலர் அ.சிவாவை தலைவர் வேட்பாளராக அக்கட்சியின் தலைமை அறிவித்தது. நேற்று நடைபெற்ற மறைமுகத் தேர்தலில் சிவா மனுத் தாக்கல் செய்யும்போது, துணைத் தலைவர் வேட்பாளராக திமுக தலைமையால் அறிவிக்கப்பட்ட 26-வது வார்டு உறுப்பினர் ராஜேந்திரனும் தலைவர் பத விக்கு மனுத்தாக்கல் செய்தார்.

இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. தொடர்ந்து வாக்குப் பதிவு நடைபெற்று முடிந்தது. சிவா 16 வாக்குகளும், ராஜேந் திரன் 17 வாக்குகளும் பெற்று வெற்றி பெற்றனர்.

இதன் மூலம் திமுக தலைமையால் அறிவிக்கப்பட்ட அதிகாரப்பூர்வ வேட்பாளர் சிவா தோல்வியை தழுவினார். ராஜேந்திரன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு, சான்றிதழ் வழங்கப்பட்டது.

இதுகுறித்து திமுகவினரிடம் விசாரித்தபோது, “திமுகவால் அறிவிக்கப்பட்ட வேட்பாளர் சிவாவுக்கு ஆதரவாக இருந்த வர்களில் 8 பேர், அவருக்குப் போட்டியான ராஜேந்திரனுக்கு வாக்களித்துள்ளனர்.

மேலும், அதிமுக உறுப்பி னர்கள் மற்றும் இரு சுயேச் சைகள் உதவியோடு வெற்றிபெற்றுள்ளார்” என்று தெரிவித் தனர். துணைத் தலைவராக வேண்டியவர் தலைவர் ஆன நிலையில், துணைத் தலைவருக்கான தேர்தல், தேதி குறிப்பிடாமல் தள்ளி வைக்கப் பட்டுள்ளது.

சிவாவுக்கு ஆதரவாக இருந்த வர்களில் 8 பேர் ராஜேந்திரனுக்கு வாக்களித்துள்ளனர்.

SCROLL FOR NEXT