மதுரை: செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் நடத்திய மாநில அளவிலான கட்டுரைப் போட்டியில் மதுரையைச் சேர்ந்த மாணவர் முதலிடம் பெற்றார்.
செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் சார்பில் உலகத் தாய்மொழி தினத்தையொட்டி மதுரை செந்தமிழ் கல்லூரியில் மாநில அளவிலான கட்டுரைப் போட்டி நடந்தது. கல்லூரி மாணவர்களுக்கான இந்த போட்டியில் மதுரையிலுள்ள பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். இதில் மதுரை செந்தமிழ்க் கல்லூரியில் படிக்கும் இளங்கலை இலக்கியப் பிரிவு இரண்டாம் ஆண்டு மாணவர் மருது பகவதி முதல் பரிசு பெற்றார். சென்னையில் பிப். 22-ல் நடைபெறும் உலகத் தாய்மொழி நாள் விழாவில் அவருக்கு பரிசுத் தொகை ரூ.25 ஆயிரம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட உள்ளதாக செந்தமிழ்க் கல்லூரி பேராசிரியை ரேவதி சுப்புலட்சுமி தெரிவித்தார்.