தமிழகம்

ஜனவரி 17-ல் ரேஷன் கடைகளுக்கு விடுமுறை

செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளுக்கு வரும் ஜனவரி 17-ஆம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளுக்கும் ஜனவரி 17-ஆம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக வரும் பிப்ரவரி 4-ஆம் தேதி வேலை நாளாக செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பணியாளர்கள் தங்கள் சொந்த ஊருக்குச் சென்று பண்டிகையை மகிழ்வுடன் கொண்டாட ஏதுவாகவும், 16.1.2022 (ஞாயிற்றுக்கிழமை) அன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் நிலையிலும், 18.1.2022 தைப்பூசத் திருநாள் அன்று அரசு விடுமுறையானதாலும், இடைப்பட்ட 17.1.2022 திங்கட்கிழமை அன்று தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவிக்குமாறு பணியாளர்கள் சங்கங்களிடமிருந்து அரசுக்குக் கோரிக்கைகள் வரப்பெற்றன.

இதனைப் பரிசீலித்து தமிழக அரசு, பொங்கல் மற்றும் தைப்பூசத் திருநாளுக்கு இடைப்பட்ட நாளான 17.1.2022 திங்கட்கிழமை அன்று தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் அனைத்துக் கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அளித்தும் நேற்று அரசாணை வெளியிட்டிருந்த நிலையில், ரேஷன் கடைகளுக்கும் ஜனவரி 17-ஆம் தேதி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT