கோப்புப் படம் 
தமிழகம்

நாம் தமிழர் பொதுக்கூட்டத்தில் திமுகவினர் தாக்குதல்: அன்புமணி கண்டனம்

செய்திப்பிரிவு

சென்னை: நாம் தமிழர் கட்சி பொதுக்கூட்டத்தில் திமுகவினர் தாக்குதல் நடத்தியது கண்டிக்கத்தக்கது என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து இன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "தருமபுரி மாவட்டம் மொரப்பூரில் நாம் தமிழர் கட்சியினர் நடத்திய பொதுக்கூட்டத்தில் திமுகவினர் தாக்குதல் நடத்தியிருப்பது கண்டிக்கத்தக்கது.

சகிப்புத் தன்மையும், கருத்துரிமையை மதிப்பதும்தான் ஜனநாயக அரசியலின் அடிப்படை. அதை மீறியவர்கள் யாராக இருந்தாலும் சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டும்!

விமர்சனங்களுக்கு வன்முறைகளால் பதிலடி தரத் தொடங்கினால் தமிழகம் அரசியல் களமாக இருக்காது.... வன்முறைக் களமாக மாறிவிடும். அந்த நிலை ஏற்பட்டு விடக் கூடாது. அதைக் கருத்தில் கொண்டு இனி இத்தகைய நிகழ்வுகள் நடக்காமல் அனைவரும் தடுக்க வேண்டும்!" என்று அன்புமணி தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT