தமிழகம்

கிறிஸ்துமஸ் விழாவை வரவேற்கும் விதமாகதாமஸ் ஆலயத்தில் மெழுகுவர்த்தி ஆராதனை

செய்திப்பிரிவு

உதகை: நீலகிரி மாவட்டத்தில் கரோனா பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக கிறிஸ்தவ ஆலயங்களில் கிறிஸ்துமஸ் பண்டிகையின்போது ஆராதனைகள், வழிபாடுகள் நடைபெறவில்லை. வரும் 25-ம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது.

இதை வரவேற்கும் விதமாக, உதகையில் உள்ள 150 ஆண்டுகள் பழமை வாய்ந்த புனித தாமஸ் ஆலயத்தில் மெழுகுவர்த்தி ஆராதனை, ஜெபகீதம் இசைத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த ஆராதனை முழுமையாக மெழுகுவர்த்திகள் வெளிச்சத்தில் நடைபெற்றது, குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT