தமிழகம்

சுட்டெரிக்கும் வெயிலால் ஏசி பஸ்களில் கூட்டம் அதிகரிப்பு: பராமரிப்பு பணி துரிதப்படுத்த கோரிக்கை

செய்திப்பிரிவு

கோடை காலம் தொடங்கு வதற்கு முன்பே வெயில் சுட்டெரிக்க தொடங்கியுள்ளதால், மாநகர ஏசி பஸ்களில் பயணி களின் கூட்டம் கணிசமாக அதிகரித் துள்ளது. மேலும், ஏசி பஸ்களில் பராமரிப்பு பணிகளை துரிதப்படுத்த வேண்டுமென பயணிகள் வலியுறுத்தியுள்ளனர்.

மாநகர போக்குவரத்து கழகத்தில் தாம்பரம், பிராட்வே, கோவளம், வண்டலூர், கேளம் பாக்கம், மகாபலிபுரம், காஞ்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு 100 ஏசி பஸ்கள் இயக்கப்படுகின்றன.

டிசம்பரில் ஏற்பட்ட கனமழையால் ஏசி பஸ்கள் இயக்கப்படாமல் இருந்தது. ஒரு குறிப்பிட்ட வழித்தடங்களில் மட்டுமே குறைவான ஏசி பஸ்கள் இயக்கப்பட்டன. இந்நிலையில், தற்போது வெயில் சுட்டெரிக்க தொடங்கியதால், பயணிகள் கூட்டம் கணிசமாக அதிகரித் துள்ளது.

இது குறித்து மாநகர போக்கு வரத்து அதிகாரி கூறும்போது, ''மற்ற நாட்களை காட்டிலும் கோடை காலத்தில்தான் ஏசி பஸ்களில் அதிகளவில் பயணம் செய்வார்கள். ஆனால், இப்போதே, வெயில் சுட்டெரிக்க தொடங்கியுள்ளதால், ஏசி பஸ்களில் பயணிகள் கூட்டம் வழக்கத்தை விட, 10 முதல் 20 சத வீதம் அதிகரித்துள்ளது. இதனால், கடந்த மாதங்களை ஒப்பிடுகையில் ஏசி பஸ்களால் வரும் வருமானம் ரூ.3 லட்சம் அதிகரித்துள்ளது.

இது வரும் மாதங்களில் ரூ.5 லட்சமாக உயரும் என எதிர்பார்க்கிறோம்’’ என் றார்.

பயணிகள் சிலர் கூறும்போது, ‘‘ஏசி பஸ்களில் இருக்கைகள் அழுக்காக இருக்கிறது. சில நேரங்களில் துர்நாற்றம் வீசுகிறது. எனவே, ஏசி பஸ்களை பராமரித்து இயக்கினால், வெயில் காலத்தில் மக்கள் அதிகளவில் பயணம் மேற்கொள்வார்கள்’’ என்றனர்.

ஏசி பஸ்களில் இருக்கைகள் அழுக்காக இருக்கிறது. சில நேரங்களில் துர்நாற்றம் வீசுகிறது. ஏசி பஸ்களை பராமரித்து இயக்கினால், வெயில் காலத்தில் மக்கள் அதிகளவில் பயணம் மேற்கொள்வார்கள்

SCROLL FOR NEXT