தமிழகம்

டிசம்பர் 1ஆம் தேதிவரை தமிழகத்தில் மழை: வானிலை ஆய்வு மையம்

செய்திப்பிரிவு

டிசம்பர் 1ஆம் தேதி வரை தமிழகத்தில் மழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை அய்வு மையம் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

“குமரிக் கடல்‌ மற்றும்‌ அதனை ஒட்டிய இலங்கை கடற்‌பகுதியில்‌ நிலவும்‌ வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக ராணிப்பேட்டை, திருவள்ளூர்‌ மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய அதி கனமழை பெய்யும். சென்னை, காஞ்சிபுரம்‌, செங்கல்பட்டு, விழுப்புரம்‌, திருவண்ணாமலை, வேலூர்‌, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம்‌, கன்னியாகுமரி மாவட்டங்களில்‌ ஒருசில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய கனமழை முதல்‌ மிக கனமழை பெய்யும்.

திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, அரியலூர்‌, பெரம்பலூர்‌, கள்ளக்குறிச்சி, சேலம்‌, நாமக்கல்‌, திருப்பூர்‌, ஈரோடு, கோயம்புத்தூர்‌, நீலகிரி, தென்காசி, கடலூர்‌, புதுக்கோட்டை, டெல்டா மாவட்டங்கள்‌ மற்றும்‌ புதுவை, காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய கனமழையும்‌, ஏனைய மாவட்டங்களில்‌ பெரும்பாலான இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய மிதமான மழையும்‌ பெய்யக்கூடும்‌.

தமிழகத்தில் வரும் டிசம்பர் 1ஆம் தேதிவரை மழை பெய்யக்கூடும்.

சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு நகரின்‌ ஒருசில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய கனமழை முதல்‌ மிக கனமழை பெய்யக்கூடும்‌.

குமரிக் கடல், தென்மேற்கு வங்கக் கடல், தென் கடலோரப் பகுதிகளில் காற்று 40 கி.மீ. முதல் 60 கி.மீ. வரை வீசக்கூடும். எனவே, மீனவர்கள் இப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம்”.

இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT