கோப்புப் படம். 
தமிழகம்

தமிழகத்தில் 15 இடங்களில் கனமழை பதிவு: சென்னை வானிலை ஆய்வு மையம்

செய்திப்பிரிவு

பருவமழை காரணமாகத் தமிழகத்தில் 15 இடங்களில் அதி கனமழை முதல் மிக கனமழை பதிவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வடகிழக்குப் பருவமழை காரணமாக இந்த மாதம் தொடக்கம் முழுவதும் கனமழை தீவிரமாகப் பெய்து வந்தது. குறிப்பாக அடுத்தடுத்து காற்றழுத்தத் தாழ்வுப் பகுதிகள் உருவாகத் தொடங்கியதால் தமிழகம் முழுவதும் தொடர் கனமழை பெய்து வருகிறது.

தமிழகம் முழுவதும் 26 மற்றும் 27ஆம் தேதிகளில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்த நிலையில், இதுவரை தமிழகத்தில் எந்தெந்தப் பகுதியில் மழைப்பொழிவு அதிகம் பதிவாகி உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

"தமிழகத்தில் இதுவரை 15 இடங்களில் அதி கனமழை முதல் மிக கனமழை பதிவாகியுள்ளது. இதில் 3 இடங்களில் அதி கனமழையும், 12 இடங்களில் மிக கனமழையும் பதிவாகியுள்ளது.

அதிகபட்சமாக தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் 31 செ.மீ. மழையும், தூத்துக்குடியில் 27 செ.மீ. மழையும், திருச்செந்தூரில் 23 செ.மீ. மழையும், நாகப்பட்டினத்தில் 19 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது. ஸ்ரீவைகுண்டத்தில் 18 செ.மீ., குலசேகரப்பட்டினத்தில் 16 செ.மீ., வைப்பாற்றில் 15 செ.மீ., காரைக்கால் பகுதியில் 12 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

மேலும், சென்னையில் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்'' என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT